பாரத் பிதா பி.ஜே கீ ஜே!!

بسم الله ألرحمنا الرحيم
Important Note : This is an article based on Facts, to view the evidence please click the appropriate links highlighted. If any one wants to recive it by mail please send mail to tmpolitics@gmail.com
முக்கிய குறிப்பு : இந்த கட்டுரை ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது ஆகவே குறித்து காட்டப்பட்டுள்ள இடங்களில் சொடுக்கி ஆதாரங்களை படிக்கவும். ஆதாரங்களை மின்னஞ்சலில் பெற விரும்புபவர்கள் tmpolitics@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

(1736)وَلاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولـئِكَ كَانَ عَنْهُ مَسْؤُولاً

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ
அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக(மறுமையில்)செவிப்புலனும்,பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன்17:36)

وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال” كفي بالمرء كذبا أن يحدث بكل ما سمع” رواه مسلم

எவன் ஒருவன் தான் கேட்டதை எல்லாம் பரப்பக் கூடியவனக இருக்கின்றனோ, அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சாட்சியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி)ஆதாரம்: முஸ்லிம்


அன்பு சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக ததஜ-வினர் தன்னை எதிர்ப்பவர்களை நோக்கி வீசும் குற்றசாட்டுக்கள், பெண்கள் தொடர்பு அல்லது பொருளாதார மோசடி இந்த இரண்டையும் சேர்த்தோ தனித்தியாகவோ எதிரியின் மீது வீசுவது வழக்கம். தற்போது இதற்க்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டாதால் இந்த இரண்டு குற்றசாட்டுகள் மக்கள் மத்தில் எடுபடவில்லை. அதனால் தற்போது ததஜ-வை எதிர்க்க கூடியவர்களை எதாவது ஓர் இயக்கத்தில் இணைத்துவிடுவது இவர்களின் வாடிக்கையாக மாறிவறுவது கண்டு நமட்டு சிரிப்புதான் வருகின்றது. தங்களை விமர்ச்சிக்கும் விமர்ச்சனங்களுக்கு பதில் சொல்லமுடியாமல் விமர்ச்சனம் செய்பவர்களை எதாவது இயக்கத்துடன் தொடர்புபடுத்தி விமர்ச்சனத்தினை தாக்கத்தை குறைப்பதற்காக இந்த வழிமுறையை பின்பற்றிவருகின்றார்கள் இன்ஷாஅல்லாஹ் இதுவும் அவர்களுக்கு கைகூடாது.

இதன் தொடர்ச்சியாக நம்மை தமுமுக-வென்றும், சகோ. ரைசுத்தீன் அவர்களை விடியல் வெள்ளி என்றும் பறைசாற்றுகின்றனர். இதை அவர்கள் நிருப்பிக்க தயாரா? நிருப்பிக்க முடியுமா? சகோ. ரைசுத்தீன் அவர்களுடன் ததஜ கிழக்கு மண்டல தலைவர் முனீப் அவர்கள் கொஞ்சி குலாவிகொண்டிருந்த காலத்தில் அவருக்கு தெரியவில்லையா?
அல்லது மிக மிக படு இரகசியமாக நடத்தப்பட்ட பாக்கரின் தம்மாம் மற்றும் அல்-ஜுபைல் விஜயத்தின் போது ரைசுத்தீன் அவர்களை உடன் வைத்திருந்தீர்களே! அப்போது அவர் விடியல் வெள்ளியென்று தெரியவில்லையா?
ஏன் பணம்கொழிக்கும் 'டான்' டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் மற்றும் எடிட்டிங் வேலைகளை காசு வாங்காமல் இலவசமாக செய்து கொடுத்தாரே அப்போது தெரியவில்லையா? அவர் விடியல் என்று.
தொடர்ந்து இவ்வாறு அவதூறுகளை வெளியிடுவிர்கள் என்றால் பொறுமையாக இருங்கள் பாக்கர் சௌதி விஜயத்தில் இரகசியமாக நடத்திய கூட்டங்கள் அந்த கூட்டத்தில் சௌதி அரசாங்கத்திற்கும் இந்த மன்னர் குடும்பத்தினருக்கும் எதிராக பேசிய பேச்சுக்களையும், ஜாலியாத்தையும அதன் முதிர்களையும் பற்றிய அவரது கீழ்த்தரமான விமர்சனங்களையும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்போம் என்பதனை தாங்களின் கணிவான கவணத்திற்க்கு வைக்கின்றோம். (இப்படி நாம் செய்தால் அதனால் பாக்கர் எந்தவகையிலும் பாதிக்கபடமாட்டார் - பாதிக்கப்படுவது ததஜ-வின் குஞ்சுகள் தான் எனவே அந்த காரியத்தை இதுவரை நாம் செய்யாமல் இருந்து வருகின்றோம்)

சமீப காலமாக ததஜ வின் சில விசிலடிச்சான் குஞ்சுகள் களவாடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்களது எழுத்து திறமையை பறைசாற்றும் விதமாக முகமூடியனிந்து கொண்டு தங்கள் தலைவரைப்போல் ஆதாரங்களற்ற வீர வசனங்களை அள்ளி வீசி வருகின்றார்கள் அவ்வாறு நமக்கு வந்த மெயிலில்,

//இவர்கள் பொய்யர்கள்தான் என்பதற்க்கு இவர்களே ஆதாரம். இதோ இவர்களின் பதிவிலிருந்து... இந்தியாவில் எங்கேயாவது குண்டு வெடித்தாலோஇ ....... அது சம்மந்தமாக யாராவது கைது செய்யப்பட்டாலோ அதற்க்கும் சகோ.பிஜெ அவர்களுக்கும் தொடர்பு என்று இவர் கற்பனை செய்து ஒரு கதையை உண்டாக்கி அதை வெளியிட்டு ஆனந்தமடையக் கூடியவர். இவர் ஒரு வகையான சைக்கோ என்று கூட சொல்லாம்.// என்று எழுதியுள்ளார்கள்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி நாம் எந்த பதிவுமிடவில்லை அதற்க்கு பிஜெ காரணம் என்று எந்த பதிவுமில்லை நாம் சைக்கோ இல்லை என்பதனை தகுந்த மருத்துவரைக்கொண்டு நிருப்பிக்க தயாராக இருக்கின்றோம் இவர்கள் பொய்யர்கள் இல்லை என்பதனை நிருப்பிக் தயாரா? நாம் சொல்வது முஸ்லிம்களை மையப்படுத்தி சதி முறியடிப்பு, வெடிகுண்டு கைப்பற்றபட்டது என்ற செய்திகளுக்கு பின்னால் பிஜெ உள்ளார் அதேபோல் நீண்ட நாட்கள் போலிஸினால் தேடபட்டுவந்த ஏர்வாடி காசிம் உள்பட பலர் கைது செய்யப்பட்டதற்கு பி.ஜே அவர்களின் தொடர்பு உண்டு என்று நாம் கூறவில்லை பிஜெ அவர்கள் வெடிகுண்டு வழக்குளை விசாரித்த சிறப்பு புலானாய்வு பிரிவு காண்காணிப்பாளார் (DSP) யிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தான்தான் இவர்களை காட்டி கொடுத்ததாக. (CLICK HERE)

இதைக் கண்ட பின்பும் நம்பாமல் பி.ஜே வாழ்க என்று கத்தினால் ...? இவர்கள் மூளை கழுவி-விடப்பட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட மிக பெரிய ஆதாரம் என்ன இருக்கமுடியும். பிஜெ வருடம் முழுவதும் உதவிசெய்வதாகவும் அதற்காக பொருளாதாரத்தை திரட்ட சிறைவாசிகள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஆகியோர்களிடம் கடிதம் வாங்கி அதை வைத்து பல இலட்சங்கள் வசூல் செய்தார் அதற்க்கு இந்த நாள்வரை கணக்குகளை யாரிடமும் காண்பிக்கவில்லை அதுமட்டுமல்ல சில மாதங்கள் உதவி செய்துவிட்ட அந்த குடும்பங்களை அப்போவென்று விட்டவிட்டார் என்று எழுதினால் மிகபெரிய அறிவாளி போன்று சிறைவாசிகளுக்கு உதவிசெய்தற்கு ஆதாரம் தந்துள்ளார் என்றும் நாம் வைத்த வாதம் நமக்கு எதிராக திரும்பியுள்ளது என்றும் எழுதியுள்ளார். இவர்கள் தமிழைப்படித்து அதைகூட புரியமுடியாத அளவிற்க்கு உள்ளனர் என்பதனை நினைத்து வியப்புக்குள்ளாகிறோம். நாம் எழுதியதற்க்கு கணக்கை எங்கு காண்பித்தார்? இப்போதும் கேட்கின்றோம் தொடர்ந்து செய்த இரகசிய வசூலின் கணக்குகளை மக்கள் மன்றத்தில் வைக்க தயாரா? அதன் செலவுகளையும் வைக்க தயாரா? ததஜ-வின் மாநில தலைவர் தயாராக இருக்கின்றாரா?

தானைத்தலைவன் பிஜெயும் தன்மானத் தளபதி பாக்கரும்....
பாக்கர் ரத்னசபாபதியை கோவையில் சந்திக்கவில்லை என்பதனை பத்திரிக்கையாளார்கள் குழுமத்தில் அறிவிக்க தயாரா? பாக்கரும் பிஜெயும் நெருக்கமாக உள்ளனரவாம் அதனால் சாத்திமில்லையாம், கடந்த கால வரலாற்றை திரும்பிபாருங்கள். ஹாமித் பக்ரி கைதின் போது பக்ரி அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பின் மேலாண்மை குழுவின் உறுப்பினர் அதாவது பிஜெக்கு சரிசமான பதவி அவரும் மேலாண்மை குழுவின் உறுப்பினர் தான். மேலாண்மை குழு என்றால் அது மாநிலத்தலைமை நிர்வாகிகள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் மற்றும் நடவடிக்கை ஏடுக்கும் அதிகாரம் கொண்டு குழுவாகும். ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டவுடன் அவருக்கும் நமக்கும் எந்த தொடர்பில்லை என அன்றைய தினம் அனைத்து பத்திரிக்கைகும் அறிக்கை வழங்கினார்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாத் மாநிலத்தலைவர். மூலமாக.


ஹிட் லிஸ்ட்டில் பிஜெ பெயர்வர காரணம் சைதை அஹமது அலி எழுதியது காரணம் அல்ல உண்மையான காரணம் என்னவென்று இந்த பதிவை முழுமையாக படித்து முடிக்கும் போது தெரிந்துகொள்வீர்கள்.

ததஜவின் தானைத்தலைவரால் ஏவிவடப்பட்டவர்கள் எழுதியுள்ளார்கள், நாம் ஏசி அறையிலிருந்து கதை எழுதுகின்றோமாம், என்ன அருமையான கண்டுபிடிப்பு நாம் கதை
எழுதவில்லை சகோதர சமுதயத்தை தட்டியெழுப்ப கூடிய கடந்த கால வலாற்று சம்பவங்களை டாக்குமெண்ட் ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில வைக்கின்றோம் இனி வரக்கூடிய காலங்களில்
மூதரிஞரின் முகமூடி கிழிக்கப்படும வகையில் மேலும் ஆதாரங்கள் வைக்கப்படும். மக்கள் மத்தியில் நமது எழுத்துக்களுக்கு உள்ள தாக்கம் என்னவென்று ததஜவின் முனீப் போன்ற சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்கள் அவர்கள் வசூல் செய்ய செல்லுமிடங்களில் நேற்றும் இன்றும் எப்படியென்று...


பொதுவாக நாம் எது எழுதினாலும் ஆதாரம் அல்லது நமது நம்பகமானவர்கள் தரும் செய்தியினை தீரவிசாரித்து அதற்குரிய ஆதாரங்களுடன் தான் எழுதுவோம். நமது ஆக்கங்கள் அனைத்துமே அவ்வகையைச்சார்ந்ததே.

மேலும் கருணாநிதியின் கடந்த ஆட்சியில் காவல் துறையினர் முஸ்லிம் பெண்களிடம் 'பர்தாவை' நீக்கி பார்த்து சோதனை போட்டது (இதை எந்த காலத்திலும் ஜீரணிக்க முடியாதவை மறக்க முடியாதவை) நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன் அதற்க்கு காரணம் என்ன தெரியுமா? அண்ணன் பிஜெ அவர்கள் சிறப்பு புலன் ஆய்வு அதிகாரிகளின் பிடியில் உள்ள போது பாஷh பாய் 'பர்தா' அணிந்து கொண்டு மூன்று முறை கொடுங்கையூர் சென்று வெடிக்குண்டுகள் தயாரிக்கும் வீட்டிற்க்கு சென்று வந்துள்ளார் என்று தெறிவித்தது தான். அதன் காரணமாகவே தமிழகமெங்கும் நமது முஸ்லிம் சகோதரிகளின் கண்ணியம் கழங்கப்படுத்தப்பட்டது. புர்தா அணிந்த பெண்களை சோதனையிட வேண்டும என்ற ஐடியாவை காவல்துறைக்கு கொடுத்ததே ஐயா பி.ஜே அவர்கள் தான் அதற்கு ஆதாரம் கொடுங்கையூர் சம்பவத்திற்க்கு பிஜெ-யின் தொடர்பு கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3328வது பக்கம், இது 24-3-1999ம் ஆண்டு சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 24வது பக்கதிலிருந்து. (CLICK HERE)


இது போன்று தனது பேச்சை கேட்டு குண்டு வைத்தவர்களைம், கொலைகள் செய்தவர்களையும் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக காவல்துறயில் காட்டி கொடுப்பதற்கு மூதறிஞர் பி.ஜே என்றுமே தயங்கியதில்லை அதுபோலவே தன்னை எதிர்பவர்களுக்கு எதிராக எந்த வகையான குற்றசாட்டையும் கூறுவதற்க்கு பிஜெ தயங்கமாட்டார் என்பதற்க்கு கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3331வது பக்கம், இது- சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 27வது பக்கதிலிருந்து..பாஷா பாய் கொள்ளையடிப்பவர், அப்பாவிகளையெல்லாம் கொலை செய்யக்கூடியவர் என்று கூறியது.(CLICK HERE).

கோவை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பு போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தனது இன்பார்மர்கள் மூலம் காட்டி கொடுத்தது. இன்பார்மரை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கொண்டுபோய் வாக்குமூலம் கொடுக்க ஏற்பாடு செய்தது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3339 மற்றும் 3343 வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 35வது பக்கம் (CLICK HERE FOR PAGE 35) மற்றும் 39வது (CLICK HERE FOR PAGE 39) பக்கதிலிருந்து. ஆச்சரியப்படுவீர்கள் யாரையெல்லாம் இன்பார்மர்களாக பயன்படுத்தினார்கள் என்று.

இராஜ உசேனை மற்றும் ஏர்வாடி காசிமை காட்டிக்கொடுத்தது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3347 மற்றும் 3348 வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 43 வது பக்கம் (CLICK HERE FOR PAGE 43) மற்றும் 44வது பக்கதிலிருந்து (CLICK HERE FOR PAGE 44).

இமாம் அலிக்கு எதிரான வாக்குமூலம். கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3350-வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 46வது பக்கதிலிருந்து(CLICK HERE TO READ). முதல் பாராவை படிக்கவும் இது போன்று தமிழகமெங்கும் இவரது பேச்சை கேட்டு கொலை செய்து விட்டு இவராலேயே காட்டி கொடுக்கப்பட்டு சிறையில் உள்ளவர்கள் ஏராளம் இது குறித்த தகவல்கள் எதிர் வரும் நமது பதிவுகளில் ஆதாரங்களுடன் பதியப்படும் இன்சா அல்லாஹ்.

இங்கு பதியப்பட்டுள்ளவை பானைச்சோற்றில் சில பருக்கைகளே ...விசிலடிச்சான் குஞ்சுகளே நீங்கள் எல்லாம் நேற்று வந்தவர்கள் உங்களுக்கு ததஜ உருவானபின் உள்ள இந்த இரண்டு வருட வரலாறே அறிவீர்கள் உங்கள் மூதறிஞர் பி.ஜே யின் கடந்த கால துரோகங்களை நீங்கள் அறிமாட்டிர்கள் உங்கள் பார்வைக்காக பொதுவில் பதியக்கூடிய சில விசயங்களே பதியப்படுகின்றன. இவற்றை பற்றி உங்கள் தலைமையிடம் கேள்விகள் கேளுங்கள் பதில் வரவில்லையென்றால் உணர்ந்து கொள்ளுங்கள் யார் சமுதாய துரோகி என்று.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து டாக்மென்ட்களும் முறையாக பெறப்பட்டவையாகும். இந்த வழக்கு விரைவாக நடைபெறுவதற்க்கும் தீர்ப்பு விரைவில் பெறப்படுவதற்க்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்யுங்கள். எட்டு வருடங்களாக சிறை கொட்டடியில் வாடும் எனது சகோதரனுக்கு கண்ணீர் சிந்தியவானக வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தவானாக.

குறிப்பு: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்ட எவருக்கும் நான் உதவமாட்டேன் என பிஜெ கொடுத்த வாக்குமூலம் இங்குள்ளது கோவை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திகையில் 3350-வது பக்கம், சிறப்பு புலன் ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் பிஜெ கொடுத்த வாக்குமுலத்தின் 46வது பக்கதிலிருந்து. இரண்டாவது பாராவை முழுவதுமாக படிக்கவும் பல வருடங்களுக்கு முன்னரே இதைக்குறித்து தெளிவான முடிவெடுத்து விட்டு தேர்தல் சமயத்தில் சிறைவாசிகளை பற்றி ஜெயாவிடம் பேசினேன் என்றும் தீர்மானம் நிறைவேற்றினேன் என்றும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகின்றது. இவர் சொல்வது உண்மையானால் குடந்தையில் நிறைவேற்றப்பட்டு அரசிற்கு அனுப்ப பட்ட தீர்மானத்தின் நகலை வெளியிட சொல்லுங்கள்.

பின்குறிப்பு: ஹசன் என்பவர் பெயரில் சகோ. ரைசுத்தீன் அவர்கள் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் தொடர்புடையவர் என்று மெயில் வந்தது. நமக்கு தெரிந்தவரை அவர் ததஜவுடன் தான் தொடர்பு கொண்டிருந்தார் அது தடைசெய்யப்பட்டுவிட்டதா என்ன? அவர் தொடர்பில் இருந்தவர்கள் ததஜவின் நிர்வாகிகள் தான் அப்படியானால் ததஜ வின் முனீப், தவ்பிக், உஸ்மான் போன்றோர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களா?

ஏசி அறை கதாசிரியர்கள் என்று நம்மை விமர்ச்சிப்பவர்களின் நிலை கடந்த ஜுலை 21-27 உணர்வு (உரிமை10 குரல்-46) வாரஇதழை படித்தால் தெறியும், இந்த உணர்வு இதழில் இஸ்ரேல்-லெபனான் போரின் பிண்ணனி என்ற செய்தி கட்டுரையிலிருந்து மூன்று அரேபிய கைதிகளை விடுதலை செய்தால் மூன்று இஸ்ரேல் வீரர்களை விடுதலை செய்வோம் என்று ஹிஸ்புல்லாஹ்; தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறியதாக உள்ளது. அப்படியெனில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ருல்லா அவர்கள் சென்னைக்கு வந்து அரிச்சந்திரர் அலாவுதீனை சந்தித்து பேட்டி கொடுத்து விட்டு ஜிஹாத் பேரரசன் பி.ஜே அவர்களிடம் போர் யுக்திகள் குறித்து ஆலோசித்து சென்றாரா ? அல்லது துப்பறியும் சாம்பு பி.ஜே (உளவுத் துறை நிபுனர் என்பதால்...) தலைமையில் உணர்வு ஸ்பெசல் ரிப்போர்ட் குழுவினர் (யான்பு வை தமாமிற்கு மாற்றி பில் கேட்சை முஸ்லிம் ஆக்கியவாகள்) சென்று பேட்டி எடுத்து வந்தனரா ?

உண்மை: கைதிகளாக பிடிபட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களை விடுதலை செய்யவேண்டும என்றால் இஸ்ரேலின் சிறைகளில் பல ஆன்டுகளாக வாடும் பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவி அரபுச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும என்பது தான் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹமாஸ் ஆகிய இயக்கத்தினரது கோரிக்கை. மூன்று நபருக்கு மூன்று நபர் என்றால் மிக எளிதாக விடுதலை செய்து விட்டு தங்கள் வீரர்களை இஸ்ரேல் மீட்டு சென்றிருக்கும் ஏன் ஒரு நாட்டையே இந்த அளவிற்கு குண்டு வீசி தாக்கி பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிக்க வேண்டும். குழந்தைக்கு கூட விளங்கிய இந்த விசயம் உளவுத்துறை உணர்வு ரிப்போர்ட்டர்களுக்கு விளங்காமல் போனது ஏன்? தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இந்த செய்தியை தினமும் காண்பிக்கையில் இது போன்று அண்டப் புழகை மீண்டும், மீண்டும் உணர்வு விடாது அடிப்பதன் காரணம் என்ன? ஏசி அறை கதாசிரியர்கள் யார் ? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.
இவ்வளவையும் படித்து விட்டு பி.ஜே என்ன செய்தார்? அவர் தேச பக்தரல்லவா? அதனால்தான் தீவிரவாதிகளை காட்டி கொடுத்தார்...பாரத் மாதா ஜெ.ஜெ கீ ஜே!! வந்தே மாதரம்!! பாரத் பிதா பி.ஜே கீ ஜே!! என்று இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் விரைவில் எழுதுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்..


அன்புடன்
தென்காசி பட்டனத்தான்
இஸ்லாம், முஸ்லிம், லெபனான், சிரியா, பாலஸ்தீன்

யாருடைய தூண்டுதலால் உள்ளே சென்றார்கள்?

கோவை சிறைவாசிகளும் -தமிழ்நாடு தவ்ஹீத் தலைவரும்...

இந்தப் பீஜேயின் ஏமாற்றுப்பேச்சைக்கேட்டு எத்தனை சகோதரர்கள் மாணம்மரியாதையையெல்லாம் இழந்திருக்கின்றார்கள் தெரியுமா?

எத்தனைக் குடும்பம் தெருவில்நிற்கின்றது தெரியுமா?

இன்று குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள் யாரால் உள்ளே சென்றார்கள்?

யாருடையதூண்டுதலால் உள்ளே சென்றார்கள்?

யாருடைய பேச்சைக் கேட்டு உள்ளேசென்றார்கள்?

இன்று அவர்கள் குடும்பம் பட்டினியாலும் துன்பத்தாலும் வாடிக்கொண்டிருக்கின்றதே அந்தக் குடும்பங்கள் இந்த நிலைக்கு ஆளானதற்கு என்னக்காரணம்?

இந்தப் பீஜேக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பீ.ஜே-யால் மறுக்கமுடியுமா??

20 ஆண்டுகளுக்கு முன்பு தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் செய்யாத ஒருவிஷயத்தை கையிலெடுத்தார் இந்த பீஜே. அதில் முக்கியமானது ஜிஹாத் என்றபிரச்சாரம். அதாவது ஜிஹாத் செய்வதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?

ஜிஹாத் செய்வதைவிட்டும் ஏன் மக்களை திசைத்திருப்புகின்றீர்கள்?

என்றெல்லாம் கேள்வி மேல்கேள்வியெழுப்பி அவர்களை எதிர்பதற்காக வேண்டியே அவரின் ஜிஹாத் வேடத்தைஅரங்கேற்றினார். அதோடு தன்னுடன் இருப்பவர்களிடமும் ஜிஹாத் செய்யுங்கள் என்றுதூண்டினார். இவரது சுயநலத்தை அறியாத பல சகோதரர்கள், ஏதோ இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, இவர் பேச்சை கேட்டு ஜிஹாத் என்ற பெயரால் செய்த செயலுக்காக இன்று 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றார்கள். அந்தச்சகோதரர்கள் உள்ளே தள்ளப்பட்ட பிறகு இவருடைய ஜிஹாத் பிரச்சாரம் சற்று தனியஆரம்பித்தது.


அதன் பிறகு இன்னும் சில சகோதரர்களோ ஜிஹாத் என்ற பெயரால் பையத் எனும் இயக்கத்தில் இணையத் தொடங்கினர். தவ்ஹீத் சகோதரர்கள் பெரும்பாலோர் அந்த இயக்கத்தில் சேரவே தனது செல்வாக்கு குறையும் நிலைஏற்பட்டவுடன் உடனே - அந்த பையத் இயக்கத்தை எதிர்க்கும் வன்னமாக - ஜிஹாத்எதிர்ப்பு பிரச்சாரத்தை துவங்கினார். தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக ஜிஹாத்பிரச்சாரத்தை தூண்டிவிட்டவர் பைஅத் அணியினரை பலவீனப்படுத்துவதற்காக ஜிஹாத்செய்வதே தவறு என்று அந்தர் பல்டி அடித்தார்.

இப்படி இவரின் சுய நலனுக்காகநேரத்திற்கு நேரம் நிறம் மாறுவதை தெரியாத அப்பாவி சகோதரர்கள் பலியாவது தான்பரிதாபம்.சென்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே பீஜேயின் ஜிஹாத் எதிர்ப்புப் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேலையில், அவர் அது சம்பந்தமான ஒரு கேள்விக்கு பதில் சொல்லியபோது தான் உன்மையான அவரது சுயரூபத்தைப் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குகிட்டியது.

அதாவது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக 30க்கும் மேற்பட்டஇளைஞர்களை வைத்து 'ரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சி' நடத்தப்பட்டது. அதில் நானும்கலந்துக்கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் ஒரு சகோதரன் 'நீங்கள் தான் அந்தக்கோவை சகோதரர்களை ஜிகாத் செய்யத் தூண்டினீர்கள்' என்று சொல்கிறார்களே என்றுகேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த பீஜே, 'ஆம்! நான் அன்று அவ்வாறுசொன்னேன் என்பது உன்மைத்தான். ஆனால் நான் அன்று சொன்னதெல்லாம் தவறுஎன்று இந்த 4 மாதங்களாக, நான் தர்ஜுமா எழுதுவதற்காக குர்ஆனை ஆய்வு செய்தபோது தான் எனக்குத் தெரிய வந்தது. காரணம் முன்பெல்லாம் நான் ஒரு வசனத்தைப்படிப்பேன். அதை ஆய்வு செய்யாமல் அப்படியே சொல்லிவிடுவேன். இப்பொழுது தான்ஜிஹாத் பற்றி நாம் முன்பு சென்னது அனைத்தும் தவறு என்று புரிந்தது' எனக் கூறினார்.

அதாவது தான் முன்பு சொன்னெதெல்லாம் ஆய்வு செய்யாமல் தவறாக சொன்னதாகவும்இப்பொழுது தான் இவர் உன்மையிலேயே(?) ஆய்வு செய்ததாகவும் சொல்கிறார் என்றால்என்ன அர்த்தம்?

இவருடைய பேச்சை நம்பி இவர் செய்யும் சத்தியத்தை நம்பி இவரின்இன்றைய கூற்றின் படி மோசம் போன சகோதரர்களின் நிலை என்ன?

அவர்களின்குடும்பம் கதி என்ன?

இப்படி எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் சுயநலத்துக்காக நேரத்துக்குநேரம் மாறி மாறி ஃபத்வா கொடுக்கும் இவர் குடும்பத்தின் இன்றைய வசதி என்ன?

என்பதை சமுதாயம் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு பேச்சுக்காக அவர் தவறாகஃபத்வாக் கொடுத்துவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி தனது தவறானஃபத்வாவை கேட்டு, அதன் படி நடந்ததால் இன்று 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அவர்களுக்காக இவர், இந்த 8 ஆண்டுகளில் எத்தனை தடவை குரல்கொடுத்திருக்கின்றார்?

எத்தனை தடவை அவர்களுக்காக போராடியிருக்கின்றார்?

அப்படிஇவர் பேச்சைக் கேட்டு ஜாமீனில் வர முடியாத அளவுக்கு 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள். அவர்களுக்காகவும் அவர்களின்குடும்பத்திற்காகவும் இதுவரையில் எந்த உதவிக்காகவாவது போராடியிருப்பாரா?

உடனேசொல்லுவார்கள் இவர் அடிவருடிகள் 'தற்போது ஜெயலலிதாவிடம் போய் பேசினாரேஎன்று' அது ஏமாற்று வேலை. அங்கேயும் தனது காட்டிக்கொடுக்கும் வேலையை அவர்செய்யாமல் இல்லை. அதுமட்டுமல்ல தமுமுக காரன் அந்தப் பிரச்சனையை எடுத்து அவர்களுக்காக போரடுகிறான் என்பதற்காக இவர்கள் இதை கையில்எடுத்திருக்கின்றார்கள் உண்மையில் இவர் இப்படி அவர்கள் வெளியே வருவதில்ஆசைப்பட்டவராக இருந்தால் காவல்துரையினரிடம் அவர்களுக்கு எதிராக சாட்சிசொல்லுவாரா?

இன்னும் சில சகோதரர்களை காட்டிக் கொடுத்தாரே, அது எத்தனைப்பேருக்குத் தெரியும்?

எந்த அளவுக்கு இவர் நடந்துக் கொண்டார் என்பதற்கு சிறு உதாரணத்தை பாருங்கள்.இவர் தமுமுகவில் இருந்த பொழுது ஒரு தமுமுக சகோதரர் அதுவும் ரமநாதபுரத்தில் இஸ்லாமிய அரக்கட்டளையில் பணிபரிந்துக் கொண்டிருந்த ஒரு சகோதரர்இவரிடம் 'ஏன் நீங்கள் மட்டும் இமாம் அலி சுட்டுக்கொள்ளப் பட்ட சம்பவம் பற்றிபத்திரிக்கையில் எழுதவில்லை? எவன் எவனோ எழுதுகிறான்? அத்தனைப் பத்திரிக்கைகாரணும் எழுதினான். ஆனால் நீங்கள் மட்டும் நமது சமுதாயத்திற்காக துவங்கப்பட்டஉணர்வு இதழில் எழுதவில்லையே ஏன்?' என்று கேட்டதற்கு 'அது பற்றி உங்களுக்குசொன்னா புரியாதும்மா' என்று சொல்லி சமாளித்திருக்கின்றார்.

அதோடு பீஜே சும்மாஇருந்திருந்தாலும் பரவாயில்லை. அந்தச் சகோதரன் சிறைவாசி சம்பந்தமாக இவரிடம்கேள்வி எழுப்பியதற்காக அவர் பணிபுரிந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதைநடத்திய வலைகுடா வாழ் சகோதரர்களுக்கும் போன் செய்து 'அந்த ...... சரியில்லை.ஆந்த ஆளோட போக்கு சரியில்லை. அவர வேலைய விட்டு தூக்கிடுங்க'என்றிருக்கின்றார்.உடனே அந்த சகோதர்கள் அண்ணனின் உத்தரவுக்கு இனங்க அனைத்துஇடங்களிலிருந்தும் போன் கால்கள். உடனே அந்த சகோதரருடைய வேலைக் காலி.

ஏன்இந்த புத்தி இவருக்கு? அந்த சிறைவாசி சகோதரர்கள் பற்றி பேசினாலே உடனேபோட்டு கொடுத்து விடுவது தான் இந்த நயவஞ்சகனின் வேலை. இது சிறிய உதாரணம்தான். இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் இருக்கின்றது தெரியுமா?தமுமுக இத்தனை ஆண்டுகாலம் ஏன் சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்கவில்லைஎன்று சிலர் கேட்கின்றார்கள். உன்மையில் இந்த பீஜே தமுமுகவில் இருந்த பொழுதுஅதன் தலைமையை இந்த தனி நபர் சுயமாக செயல் பட விடாமல் தடுத்தார் என்பதுதான் சத்தியமான உண்மை.

குறிப்பாக சிறைவாசிகள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும்விஷயங்களிலும் சரி, அல்லது மற்ற இஸ்லாமிய சமுதாயம் ஒன்றாக ஒரு முடிவைஎடுக்கும் விஷயத்திலும் சரி. அவை அனைத்திலும் தமுமுக கலந்துக்கொள்ளாமல் தடுத்ததே இந்த பீஜே தான்;. இது போன்ற இன்னும் பல சமுதாய நலப் பணிகள்சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த சமுதாய துரோகி அந்த தமுமுக தலைமையைதடுத்து வருவதை கண்கூடாக கண்டுள்ளோம். அதை சில தலைவர்கள் சொல்லிவருத்தப்பட்டார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் அந்தத் தலைவர்கள் ஒரு பெரியசமுதாய இயக்கம் உடைந்து சிதறி விடக்கூடாது. அதன் மூலம் நமது லட்சியங்கள்பாழ்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பலமுறை இந்த சமுதாய துரோகியுடைய பேச்சைமீறாமல் தலைசாய்தார்கள்.

அவரின் சமுதாய துரோகம் அதிகமாகி உச்சக்கட்டத்தைஅடைந்தது. பீஜே வெளியேறிய பிறகு தான் முஸ்லீம்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் போராடத் துணிந்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இந்த பீஜே சிறைவாசிகள் பிரச்சனைஉட்பட எந்த காரியத்திலும், குறிப்பாக சமுதயத்திற்கு பயனளிக்கக்கூடிய, ஒட்டு மொத்தசமுதாயமும் ஒன்றாய் இனைந்திருக்கக்கூடிய எந்த தருனத்தையும் இவர் அனுமதிக்கவில்லை. இது நன்றாத் தெரியும். இது தான் உண்மை.

உண்மையிலேயே நமதுசகோதரர்கள் குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் இவருடைய உண்மை நிலையைத்தெரிந்து அவரை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இவரது இந்த சமுதாய துரோகச்செயலை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. இனிமேலும் இவரது சூன்ய பேச்சில் மயங்கிசமுதாயத்திற்கு நாமும் சேர்ந்து துரோகம் செய்வோமேயானால் நாளை மறுமைநாளில்அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி எச்சரிக்கின்றோம். அதுமட்டுமல்ல அன்று இவரை நம்பிய பலர் இன்று இவரால் பல துரோகத்துக்கும் பலகொடுமைகளுக்கும், இழி சொற்களுக்கும் ஆளாகியிருக்கின்றார்களே அதே நிலைமைநாளை உங்களுக்கும் வரும் என்ற எச்சரிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.அல்லாஹ் நன்கறிந்தவன்.

வஸ்ஸலாம்.
அப்துர் ரஹ்மான்,
சென்னை.
இஸ்லாம், முஸ்லிம், லெபனான், சிரியா, பாலஸ்தீன்

முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து


பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி, மிக பெரிய சதியிலிருந்து தப்பித்தார் ததஜ-வின் பொதுசெயலாளார் S.Mபாக்கர்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,அன்பின்கினிய சகோதரார்களே! கடந்த 23-7-2006 தமிழகத்தின் காலை நாளிதழ்களில் அனைத்தும் ஒரு செய்தியை மையமாக வைத்து மரண ஓலமிட்டனர்

அதாவது கோவையில் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கர சதி
கோவையை தகர்க்க சதித்திட்டம்
கோவையில் குண்டு வைக்க சதித்திட்டம்
இது தான் அன்றைய செய்தி....


எல்லோருடைய பார்வையில் பொதுவான சில கேள்விகள் இருந்தாலும் நாம் நமது சிறப்பார்வை (கள ஆய்வல்ல)வுடன், இந்த செய்திகள் அனைத்தையும் திரட்டி வைத்து பிரி;ன்ட் எடுத்து பார்த்த்போது மிகபெரிய சமுதாய தூரோகிகளின் முகம் அந்த செய்தினுள் ஒளிந்திருப்பதை காண முடிந்தது. இதை பார்ப்பதற்க்கு முன்னால் கடந்தகாலத்தில் நடந்த காலசுவடுகளின் சில தகவல்களை தாங்கள் பார்வைக்கு தருகின்றேன்

பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குணடு வைத்து தகர்க்க சதி, என்று மிக பெரிய செய்தி ஒன்றை நாளிதழ்களுக்கு தமிழக உளவு துறையின் மூலம் பாரிமாறப்பட்டு அதற்க்கு ஆதாரமாக டிபன் பாக்ஸ் குண்டு என்று ஒன்றை காண்பித்தார்கள். உணவு கொண்டு செல்வதற்காக உள்ள டிபன் பாக்ஸில் வெடிக்குண்டா? என்றார்கள் அதற்க்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதரன்களை சுட்டிகாட்டினார்கள் அன்றைய உளவு துறையின் உலுத்துப்போன அதிகாரிகள்.

சில வருடங்களுக்கு முன்னால், மௌலவி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களை கைது செய்து உளவு துறை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது இஸ்லாமிய டிபன்ஸ் போர்ஸ் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் அமைதியை குலைப்தற்க்கும் பொதுமக்களுடைய உயிர்களை எடுத்து மாநிலத்தில் அமைதியின்மையை எற்படுத்த வெடிகுண்டுகளை தயாரித்தல் வினியோகித்தல் என்று பறைசாற்றியது.

(மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சென்னை புறநகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தான் பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது விசேஷசெய்தியாகும்)

அடுத்து தற்போது உள்ளவை...

இதில் அனைத்திலும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று உளவு துறை நுண்ணறிவு பரிவிலுள்ள நுண்கிருமி (வைரஸ்) ரத்னசபாபதி தலையீடு உண்டு (மாசனமுத்துவின் மறைமுக தொடர்பும் - யார் தெரியுமா இந்த மாசனமுத்து கோவைவாசிகளிடம் கேட்டுகொள்ளவும்)

இரண்டாவது ஆச்சாரியமானது என்வென்றால் இதில் கைது செய்யப்பட்டவர்கள் எதாவது ஒருவகையில் ததஜ-வின் தற்போதைய மாநில தலைவர் பிஜெ-யுடன் தொடர்புடையவர்கள்-என்ற அபூர்வ செய்தி நமது கண்களை ஆறத்தழுவியது.

பொதுவாக கோவையை மையமாக நடைபெறக்கூடியவைகளில் முக்கியமாக இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறவதற்க்கு முந்திய தினம் அல்லது அதே தினத்தில் தனது தலைமை தளபதியாக யார் இருக்கின்றாரோ அவரை கோவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அண்ணன் பிஜெ-யின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயமாகும். இந்த சம்பவத்திற்க்கு முன் பிஜெ-யின் தலைமை தளபதி போர்வாள் S.M பாக்கர் அவர்கள் கோவையில் இருந்துள்ளார்கள். கைது சம்பவத்திற்க்கு பிறகு ஆள் கோவையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நமது கிடைத்த வலுவான செய்தியாகும்.

தனக்கு அடுத்த இடத்தில் மக்கள் மத்தியில் பேச கூடியவராக இருப்பவரை பிஜெ அவர்கள் இதே முறையில் தான் மாட்டிவிட்டு ஒரேயடியாக (ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு) மட்டம் தட்டுவார் அதற்க்கு முந்தைய பக்ரியின் கைதும், அதற்க்கு முன் கோவை குண்டு வெடிப்பு அன்று பக்ரியை கோட்டைமேட்டில் இருக்குமாறு செய்ததும் (இந்த செய்தியை உறுதி செய்யகொள்ள நினைப்பவர்கள் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசகத்திற்க்கு பிறகு நெல்லை ஏர்வாடியில் அளித்த உள்அரங்க பேட்டியை காணவும்)

ஆனால் இங்கு அண்ணன் பிஜெ அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தளபதி பாக்கர் எப்படியென்றால் தளபதி பாக்கர்-அவர்களின் கோவை சுற்றுபயணத்தில் நுண்கிருமி
ரத்னசபாதியை சந்திப்பு இல்லை ஆனால் தளபதி பாக்கர் அவர்கள் நுண்கிருமி ரத்னசபாதியை கைதுக்கு படலத்திற்க்கு முன் இரகசியமான முக்கிய இடத்தில் தனிமையில் சந்திதுள்ளார், அந்த சந்திப்பில் சில விவரங்களை (லூஸ்டாக் முறையில்) அண்ணனின் பிரதிநிதி என்ற எண்ணத்தில் நுண்கிருமி கொடுத்துவிட்டார் தளபதிக்கு. இதைகேட்ட பாக்கர் ஆடிபோனலும் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து இறுதில் கோவையைவிட்டு இரகசியமாக வெளியேறியும் விட்டார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதுதானோ என்று எண்ண தோன்றுகின்றது.



ஐந்து பேரில் பாஷா சகோதர்கள் பிஜெ-யின் ததஜவில் தொடர்புடையவர்கள் என்பது கொசுறு செய்தி....

விஷயம் இது தான்....

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என்ற நிலையில் உள்ளது. வரும் தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக இந்தாலும் அல்லது அவர்களுக்கு எதிராக இருந்தாலும் பாதிப்பிற்குள்ளவாது சிறைவாசிகள் அல்ல காரணம் 8 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சிறைகூடத்தில் கழித்தவர்கள் அவர்கள். ஆனால் தீர்ப்பினால் இரண்டு வகையினருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அவர்களில் ஒரு வகை கோவை குண்டு வெடிப்பு மற்றும் கலவத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் (மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை)கள் இரண்டாவது வகையினர் பிஜெ-யும் அவருடன் உள்ள கூட்டமாகும். எனவே மேற்கண்ட இருவகையினரும் கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிப்போட வேண்டும் அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவஉதவிகள் செய்வதும் தடைசெய்யவேண்டும். காரணம் மருத்துவமனையில் இருக்க கூடியவர்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படலாம் இதனால் சிறைவாசிகளில் உண்மைநிலை மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் இதுவெல்லாம் மேற்கண்ட இருவகையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இருவரின் கூட்டுசதியில் உறுவானது தான் இந்த வெடிக்குண்டு சதி வைபவம். மக்கள் இந்த சமூதய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏதோ இவர்களை குற்றப்படுத்தவேண்டும் என்பதற்காக இதை நாம் எழுதவில்லை மறாக காரண காரியத்துடன் நாம் எழுதுகின்றோம்.

இதில் பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் ஒரு இடைசெருகல் செய்தி ஒன்று கசியவிடப்பட்டது என்றே போதும் இவர்களும் உளவுத்துறையினருக்குமுள்ள தொடர்பு.

ஹிட் லிஸ்ட்டில் பிஜே பெயர் - குமுதம் ரிப்போர்ட்டர்


காரணம் மனித நீதி பாசறையினரை கடுமையாக விமர்ச்சனம் செய்தவர்களில் ஒருவர் பிஜெ, இப்படி பகிரங்கமாக பேசியவர் தமுமுக-வின் சுனாமி கணக்குகளை சரிபார்க்க பிஜெயால் பரிந்துரை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றுதான் இந்த மனித நீதி பாசறை அத்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் அலுவலகத்தில் பிஜெயின் பிரதிநிதி இரண்டு முறை சென்றுவந்துள்ளார்கள் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அதையும் பெருமையாக தனது சைட்டிலும் உணர்விலும் வெளிட்டார்கள்.

சென்னையில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஹோட்டல்களில் பலவருடங்களுக்கு முன் தொடர் குண்டுவெடிப்பு நடந்தவுடன் (அதில் ஒரு ஹோட்டல் தற்போது அண்ணனின் கட்டுபாட்டில்), கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், ஜிஹாத் கமிட்டி தடைசெய்யப்பட்டவுடன், அதே போல் அல்-உம்மா தடைசெய்யப்பட்டவுடன், போரளி இமாம் அலி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனஸா அடக்கம் செய்யப்பட்டவுடன், இப்படி எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதயாத்திற்க்கு எதிராக காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளபோது மட்டும் 'பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து' என்ற செய்தி மிக பெரிய அளவில் ஊடகத்துறைக்கு உளவுத்துறையின் துரைமார்களால் கொடுக்கப்படுவதின் இரகசியம் தான் என்ன? இந்த செய்தி வெளியிட்வுடன் உடனடியாக தானியங்கி ஆயதம் தாங்கிய
காவலர்களால் புடைசூல அண்ணன் பிஜெ அவர்கள் நடமாடுவது எதனால் விளக்குவார்களா பிஜெ அல்லது பிஜெ-யின் பினாமிகள்?

ஓவ்வொரு முறையும் தமிழகத்தில் காவல்துறையால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் கைது செய்யப்படும்போதும் அவர்களிடம் இருந்து சங்பரிவார தலைவர்களை கொல்ல திட்டம் என்று ஒரு ஹிட் லிஸ்ட்டை கைப்பற்றியுள்ளதாக போலிஸ் தகவல் வெளியிடும் அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டு அண்ணன் பி.ஜே க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.. ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்யும்போதோ அல்லது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார நபர்களிடமிருந்தோ கைப்பற்றப்படும் ஹிட் லிஸ்ட்டில் ஒருபோதும் அண்ணன் பி.ஜே பெயர் இருந்ததாக செய்தி வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கைது
செய்யப்படும்போதும் ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பது ஏன்? ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் "சர் சங் சலக்குகளில்" ஒருவரா? சற்று சிந்தியுங்கள் மக்களே !! ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.



இந்தியாவில் பாசிச இந்து இயக்கங்களில் தலைவர்களுக்கு முஸ்லிம்களால் உயிருக்கு ஆபத்து என்ற செய்திக்கு இணையாக உளவுத்துறையினர் ஒரு முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று யாரைத்தெரியுமா சுட்டிக்காட்டுகின்றார்கள்? மரியாதைக்குரிய அண்ணன் பிஜெ அவர்கள் தான் என்பது தற்போதுள்ள ஒரே ஆறுதல் செய்தி.

(குறிப்பு: கோவை சம்பவத்தில் உளவுத்துறையின் நுண்கிருமி ரத்னசபாபதி, பிஜெ-க்கு பாதுகாப்பை பலப்படுத்த நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே)



நடைபெறதாத குற்றங்களை அதாவது மிக பெரிய சதியை முறியடிப்பு, நாசவேலை முறியடிப்பு 'கோவை தப்பியது' 'சென்னை தப்பியது' என்று எப்போதுயெல்லாம் உளவுத்துறை செய்தி வெளியிடுகின்றதோ அப்போதுயெல்லாம் அதற்கு பின்னால் பல 'இன்பார்மர்கள்' உள்ளனர். (இப்படி நடப்பது முஸ்லிம் சமுதயத்திற்க்கு ஏதிராக மட்டுமே, இவர்களால் தமிழர் விடுதலைபடையையோ, அல்லது நக்ஷலைட்களையோ அல்லது இந்தியாவில் இதுபோன்ற அயூதம் தாக்கி போராடும் குழுவினருக்கு எதிராக இந்த முறியடிப்பு சம்வம் காண முடியாது காரணம் அங்கெல்லாம் நமது சமுதாயத்தில் உள்ளது போல் இன்பார்மர்கள் கிடையாது) என்பதும் இது உளவுத்துறையினர் தாங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஜோடிக்கப்படும்' FABRICATED CASED என்று ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் நடுநிலை கொண்ட நீதி தவறாத எமது மரியாதைக்குரிய காவல் துறையின் கண்ணியவான்கன்.

பொதுவாக காவல்துறையினர் ஒரு குறிப்பிட் வழக்கின் விவரங்களை பத்திரிக்கையாளருக்கு தெரிவிப்பதற்க்கு, செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்வார்கள், இதற்கென்று வழிகாட்டு நடைமுறைகளை காவல்துறை பின்பற்றி வருகின்றது. அதாவது வழக்கின் தன்மையைப்பொறுத்து அந்த பகுதியின் காவல் துறையின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பார்கள், இந்த சம்வத்தில் அதற்க்கு மாறாக உயர் அதிகாரிகள் அமைதிகாத்துள்ளனர் நுண்கிருமி மட்டுமே பேசியும் கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார் இதிலிருந்த இது ஓர் மிக பெரிய ஜோடிப்பு கேஸ் என்பது விளங்கும். இதே போல் ஹாமித்பக்ரி விஷயத்திலும், சென்னை LIC தகர்க்க நடந்த சதி-கொடுங்கையூர் வழக்கிலும் இதே போல்தான் நடந்தது. இந்த சந்தேகம் நாம் மட்டும் எழுப்பவில்லை ரத்னசபாபதி நடத்திய கூட்டதில் கலந்துகொண்ட பத்திகையாளர்கள் அனைவரும் இந்த சந்ததேகத்தை எழுப்பியுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

பத்திரிகையாளர்களின் சந்தேகம்


ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்தில் மக்களிடம் வலம் வரும் இஸ்லாமிய இயக்கங்களின் மீது தீவிரவாத சித்தாந்த்தை எதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்துடன் இணைந்து உளவுத்துறை செய்யும் சதிதான் இது அதற்க்கு நமது சமுதாயத்தினர் துணைபோவது தான் வேதனை. கடந்த காலங்களின் வரலாறும் இது தான் ஏன் தமுமுகவை தடைசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் ஆசியுடன் அன்றைய உளவுத்துறையினர் செய்த சதிகளை நினைவு கூறவும்.



அன்புடன்
தென்காசி பட்டனத்தான்

முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து


பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி, மிக பெரிய சதியிலிருந்து தப்பித்தார் ததஜ-வின் பொதுசெயலாளார் S.Mபாக்கர்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,அன்பின்கினிய சகோதரார்களே! கடந்த 23-7-2006 தமிழகத்தின் காலை நாளிதழ்களில் அனைத்தும் ஒரு செய்தியை மையமாக வைத்து மரண ஓலமிட்டனர்

அதாவது கோவையில் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கர சதி
கோவையை தகர்க்க சதித்திட்டம்
கோவையில் குண்டு வைக்க சதித்திட்டம்
இது தான் அன்றைய செய்தி....


எல்லோருடைய பார்வையில் பொதுவான சில கேள்விகள் இருந்தாலும் நாம் நமது சிறப்பார்வை (கள ஆய்வல்ல)வுடன், இந்த செய்திகள் அனைத்தையும் திரட்டி வைத்து பிரி;ன்ட் எடுத்து பார்த்த்போது மிகபெரிய சமுதாய தூரோகிகளின் முகம் அந்த செய்தினுள் ஒளிந்திருப்பதை காண முடிந்தது. இதை பார்ப்பதற்க்கு முன்னால் கடந்தகாலத்தில் நடந்த காலசுவடுகளின் சில தகவல்களை தாங்கள் பார்வைக்கு தருகின்றேன்

பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குணடு வைத்து தகர்க்க சதி, என்று மிக பெரிய செய்தி ஒன்றை நாளிதழ்களுக்கு தமிழக உளவு துறையின் மூலம் பாரிமாறப்பட்டு அதற்க்கு ஆதாரமாக டிபன் பாக்ஸ் குண்டு என்று ஒன்றை காண்பித்தார்கள். உணவு கொண்டு செல்வதற்காக உள்ள டிபன் பாக்ஸில் வெடிக்குண்டா? என்றார்கள் அதற்க்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதரன்களை சுட்டிகாட்டினார்கள் அன்றைய உளவு துறையின் உலுத்துப்போன அதிகாரிகள்.

சில வருடங்களுக்கு முன்னால், மௌலவி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களை கைது செய்து உளவு துறை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது இஸ்லாமிய டிபன்ஸ் போர்ஸ் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் அமைதியை குலைப்தற்க்கும் பொதுமக்களுடைய உயிர்களை எடுத்து மாநிலத்தில் அமைதியின்மையை எற்படுத்த வெடிகுண்டுகளை தயாரித்தல் வினியோகித்தல் என்று பறைசாற்றியது.

(மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சென்னை புறநகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தான் பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது விசேஷசெய்தியாகும்)

அடுத்து தற்போது உள்ளவை...

இதில் அனைத்திலும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று உளவு துறை நுண்ணறிவு பரிவிலுள்ள நுண்கிருமி (வைரஸ்) ரத்னசபாபதி தலையீடு உண்டு (மாசனமுத்துவின் மறைமுக தொடர்பும் - யார் தெரியுமா இந்த மாசனமுத்து கோவைவாசிகளிடம் கேட்டுகொள்ளவும்)

இரண்டாவது ஆச்சாரியமானது என்வென்றால் இதில் கைது செய்யப்பட்டவர்கள் எதாவது ஒருவகையில் ததஜ-வின் தற்போதைய மாநில தலைவர் பிஜெ-யுடன் தொடர்புடையவர்கள்-என்ற அபூர்வ செய்தி நமது கண்களை ஆறத்தழுவியது.

பொதுவாக கோவையை மையமாக நடைபெறக்கூடியவைகளில் முக்கியமாக இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறவதற்க்கு முந்திய தினம் அல்லது அதே தினத்தில் தனது தலைமை தளபதியாக யார் இருக்கின்றாரோ அவரை கோவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அண்ணன் பிஜெ-யின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயமாகும். இந்த சம்பவத்திற்க்கு முன் பிஜெ-யின் தலைமை தளபதி போர்வாள் S.M பாக்கர் அவர்கள் கோவையில் இருந்துள்ளார்கள். கைது சம்பவத்திற்க்கு பிறகு ஆள் கோவையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நமது கிடைத்த வலுவான செய்தியாகும்.

தனக்கு அடுத்த இடத்தில் மக்கள் மத்தியில் பேச கூடியவராக இருப்பவரை பிஜெ அவர்கள் இதே முறையில் தான் மாட்டிவிட்டு ஒரேயடியாக (ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு) மட்டம் தட்டுவார் அதற்க்கு முந்தைய பக்ரியின் கைதும், அதற்க்கு முன் கோவை குண்டு வெடிப்பு அன்று பக்ரியை கோட்டைமேட்டில் இருக்குமாறு செய்ததும் (இந்த செய்தியை உறுதி செய்யகொள்ள நினைப்பவர்கள் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசகத்திற்க்கு பிறகு நெல்லை ஏர்வாடியில் அளித்த உள்அரங்க பேட்டியை காணவும்)

ஆனால் இங்கு அண்ணன் பிஜெ அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தளபதி பாக்கர் எப்படியென்றால் தளபதி பாக்கர்-அவர்களின் கோவை சுற்றுபயணத்தில் நுண்கிருமி
ரத்னசபாதியை சந்திப்பு இல்லை ஆனால் தளபதி பாக்கர் அவர்கள் நுண்கிருமி ரத்னசபாதியை கைதுக்கு படலத்திற்க்கு முன் இரகசியமான முக்கிய இடத்தில் தனிமையில் சந்திதுள்ளார், அந்த சந்திப்பில் சில விவரங்களை (லூஸ்டாக் முறையில்) அண்ணனின் பிரதிநிதி என்ற எண்ணத்தில் நுண்கிருமி கொடுத்துவிட்டார் தளபதிக்கு. இதைகேட்ட பாக்கர் ஆடிபோனலும் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து இறுதில் கோவையைவிட்டு இரகசியமாக வெளியேறியும் விட்டார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதுதானோ என்று எண்ண தோன்றுகின்றது.



ஐந்து பேரில் பாஷா சகோதர்கள் பிஜெ-யின் ததஜவில் தொடர்புடையவர்கள் என்பது கொசுறு செய்தி....

விஷயம் இது தான்....

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என்ற நிலையில் உள்ளது. வரும் தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக இந்தாலும் அல்லது அவர்களுக்கு எதிராக இருந்தாலும் பாதிப்பிற்குள்ளவாது சிறைவாசிகள் அல்ல காரணம் 8 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சிறைகூடத்தில் கழித்தவர்கள் அவர்கள். ஆனால் தீர்ப்பினால் இரண்டு வகையினருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அவர்களில் ஒரு வகை கோவை குண்டு வெடிப்பு மற்றும் கலவத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் (மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை)கள் இரண்டாவது வகையினர் பிஜெ-யும் அவருடன் உள்ள கூட்டமாகும். எனவே மேற்கண்ட இருவகையினரும் கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிப்போட வேண்டும் அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவஉதவிகள் செய்வதும் தடைசெய்யவேண்டும். காரணம் மருத்துவமனையில் இருக்க கூடியவர்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படலாம் இதனால் சிறைவாசிகளில் உண்மைநிலை மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் இதுவெல்லாம் மேற்கண்ட இருவகையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இருவரின் கூட்டுசதியில் உறுவானது தான் இந்த வெடிக்குண்டு சதி வைபவம். மக்கள் இந்த சமூதய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏதோ இவர்களை குற்றப்படுத்தவேண்டும் என்பதற்காக இதை நாம் எழுதவில்லை மறாக காரண காரியத்துடன் நாம் எழுதுகின்றோம்.

இதில் பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் ஒரு இடைசெருகல் செய்தி ஒன்று கசியவிடப்பட்டது என்றே போதும் இவர்களும் உளவுத்துறையினருக்குமுள்ள தொடர்பு.

ஹிட் லிஸ்ட்டில் பிஜே பெயர் - குமுதம் ரிப்போர்ட்டர்


காரணம் மனித நீதி பாசறையினரை கடுமையாக விமர்ச்சனம் செய்தவர்களில் ஒருவர் பிஜெ, இப்படி பகிரங்கமாக பேசியவர் தமுமுக-வின் சுனாமி கணக்குகளை சரிபார்க்க பிஜெயால் பரிந்துரை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றுதான் இந்த மனித நீதி பாசறை அத்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் அலுவலகத்தில் பிஜெயின் பிரதிநிதி இரண்டு முறை சென்றுவந்துள்ளார்கள் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அதையும் பெருமையாக தனது சைட்டிலும் உணர்விலும் வெளிட்டார்கள்.

சென்னையில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஹோட்டல்களில் பலவருடங்களுக்கு முன் தொடர் குண்டுவெடிப்பு நடந்தவுடன் (அதில் ஒரு ஹோட்டல் தற்போது அண்ணனின் கட்டுபாட்டில்), கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், ஜிஹாத் கமிட்டி தடைசெய்யப்பட்டவுடன், அதே போல் அல்-உம்மா தடைசெய்யப்பட்டவுடன், போரளி இமாம் அலி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனஸா அடக்கம் செய்யப்பட்டவுடன், இப்படி எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதயாத்திற்க்கு எதிராக காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளபோது மட்டும் 'பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து' என்ற செய்தி மிக பெரிய அளவில் ஊடகத்துறைக்கு உளவுத்துறையின் துரைமார்களால் கொடுக்கப்படுவதின் இரகசியம் தான் என்ன? இந்த செய்தி வெளியிட்வுடன் உடனடியாக தானியங்கி ஆயதம் தாங்கிய
காவலர்களால் புடைசூல அண்ணன் பிஜெ அவர்கள் நடமாடுவது எதனால் விளக்குவார்களா பிஜெ அல்லது பிஜெ-யின் பினாமிகள்?

ஓவ்வொரு முறையும் தமிழகத்தில் காவல்துறையால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் கைது செய்யப்படும்போதும் அவர்களிடம் இருந்து சங்பரிவார தலைவர்களை கொல்ல திட்டம் என்று ஒரு ஹிட் லிஸ்ட்டை கைப்பற்றியுள்ளதாக போலிஸ் தகவல் வெளியிடும் அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டு அண்ணன் பி.ஜே க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.. ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்யும்போதோ அல்லது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார நபர்களிடமிருந்தோ கைப்பற்றப்படும் ஹிட் லிஸ்ட்டில் ஒருபோதும் அண்ணன் பி.ஜே பெயர் இருந்ததாக செய்தி வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கைது
செய்யப்படும்போதும் ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பது ஏன்? ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் "சர் சங் சலக்குகளில்" ஒருவரா? சற்று சிந்தியுங்கள் மக்களே !! ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.



இந்தியாவில் பாசிச இந்து இயக்கங்களில் தலைவர்களுக்கு முஸ்லிம்களால் உயிருக்கு ஆபத்து என்ற செய்திக்கு இணையாக உளவுத்துறையினர் ஒரு முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று யாரைத்தெரியுமா சுட்டிக்காட்டுகின்றார்கள்? மரியாதைக்குரிய அண்ணன் பிஜெ அவர்கள் தான் என்பது தற்போதுள்ள ஒரே ஆறுதல் செய்தி.

(குறிப்பு: கோவை சம்பவத்தில் உளவுத்துறையின் நுண்கிருமி ரத்னசபாபதி, பிஜெ-க்கு பாதுகாப்பை பலப்படுத்த நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே)



நடைபெறதாத குற்றங்களை அதாவது மிக பெரிய சதியை முறியடிப்பு, நாசவேலை முறியடிப்பு 'கோவை தப்பியது' 'சென்னை தப்பியது' என்று எப்போதுயெல்லாம் உளவுத்துறை செய்தி வெளியிடுகின்றதோ அப்போதுயெல்லாம் அதற்கு பின்னால் பல 'இன்பார்மர்கள்' உள்ளனர். (இப்படி நடப்பது முஸ்லிம் சமுதயத்திற்க்கு ஏதிராக மட்டுமே, இவர்களால் தமிழர் விடுதலைபடையையோ, அல்லது நக்ஷலைட்களையோ அல்லது இந்தியாவில் இதுபோன்ற அயூதம் தாக்கி போராடும் குழுவினருக்கு எதிராக இந்த முறியடிப்பு சம்வம் காண முடியாது காரணம் அங்கெல்லாம் நமது சமுதாயத்தில் உள்ளது போல் இன்பார்மர்கள் கிடையாது) என்பதும் இது உளவுத்துறையினர் தாங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஜோடிக்கப்படும்' FABRICATED CASED என்று ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் நடுநிலை கொண்ட நீதி தவறாத எமது மரியாதைக்குரிய காவல் துறையின் கண்ணியவான்கன்.

பொதுவாக காவல்துறையினர் ஒரு குறிப்பிட் வழக்கின் விவரங்களை பத்திரிக்கையாளருக்கு தெரிவிப்பதற்க்கு, செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்வார்கள், இதற்கென்று வழிகாட்டு நடைமுறைகளை காவல்துறை பின்பற்றி வருகின்றது. அதாவது வழக்கின் தன்மையைப்பொறுத்து அந்த பகுதியின் காவல் துறையின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பார்கள், இந்த சம்வத்தில் அதற்க்கு மாறாக உயர் அதிகாரிகள் அமைதிகாத்துள்ளனர் நுண்கிருமி மட்டுமே பேசியும் கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார் இதிலிருந்த இது ஓர் மிக பெரிய ஜோடிப்பு கேஸ் என்பது விளங்கும். இதே போல் ஹாமித்பக்ரி விஷயத்திலும், சென்னை LIC தகர்க்க நடந்த சதி-கொடுங்கையூர் வழக்கிலும் இதே போல்தான் நடந்தது. இந்த சந்தேகம் நாம் மட்டும் எழுப்பவில்லை ரத்னசபாபதி நடத்திய கூட்டதில் கலந்துகொண்ட பத்திகையாளர்கள் அனைவரும் இந்த சந்ததேகத்தை எழுப்பியுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

பத்திரிகையாளர்களின் சந்தேகம்


ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்தில் மக்களிடம் வலம் வரும் இஸ்லாமிய இயக்கங்களின் மீது தீவிரவாத சித்தாந்த்தை எதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்துடன் இணைந்து உளவுத்துறை செய்யும் சதிதான் இது அதற்க்கு நமது சமுதாயத்தினர் துணைபோவது தான் வேதனை. கடந்த காலங்களின் வரலாறும் இது தான் ஏன் தமுமுகவை தடைசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் ஆசியுடன் அன்றைய உளவுத்துறையினர் செய்த சதிகளை நினைவு கூறவும்.



அன்புடன்
தென்காசி பட்டனத்தான்

இயக்கங்களின் தற்போதைய கடமைகள்



தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள்

நெடுங்காலமாக இந்தியாவை ஜாதி வெறி, மத வெறி எனும் நோய் பீடித்து வருகின்றது. ஜாதி மதம் என்ற மாயையில் வீழ்த்தி நம்முள் ஜாதி மத கலவரங்களை மூட்டி ரத்த ஆறு ஓடச்செய்து 80 சதவிகிதத்திற்கும் அதிகமான எம் இந்திய பூர்வீக குடிமக்களை ஓர் சிறிய கூட்டம் அடிமையாக நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கோடிக்கணக்கான பெருமதியுள்ள சிறுபான்மை சமுதாயத்தின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. குஜராத்தில் எம்மக்களின் குடலுறுவிய ரத்தத் தடயங்கள் மாறும் முன் இதோ மும்பையிலும் கோவையிலும் மற்றுமோர் நிகழ்வுக்கான ஆயத்தங்கள்.

இந்தச்சூழ்நிலையில் தமிழகத்தில் நம் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி மக்களை சமூக அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய நம் இயக்கங்கள் இன்று தம்மில் அடித்துக்கொண்டு அதை உலக மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றார்கள். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தின் உரிமைக்கு குரல் கொடுக்க துவங்கப்பட்ட சில பத்திரிகைகள் தங்களின் கூட்டணி தலைவர்களின் புகழ்பாடவும் அவர்களின் ஆளுயர புகைப்படங்களை தாங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகள் மூலையில் உறங்குகின்றன.

சமூக மறுமலர்ச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட நம் இனத்தின் மீட்சிக்காகவும் துவக்கப்பட்ட பல இயக்கங்கள் தம்முள் ஏற்ப்பட்ட கலகத்தாலும் யார் பெரியவன் என்ற போட்டியில் அரசியல் சாக்கடையில் சங்கமித்ததாலும் சமூக அரசியல் பேரியக்கங்கலாகி சுய அடையாளத்தை இழந்து நிற்கின்றன. அந்தோ பரிதாபம். இந்தச்சூழ்நிலையிலும் அத்தி பூத்தாற்போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. இது வரை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்த நமது சமுதாயத்திற்கு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம் கிடைத்துள்ளது. இது உண்மையில் நம்மை மகிழ்ச்சியில் ஆழத்திய செய்தி.

அதுபோல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணியில் நமது சமுதாய இயக்கங்களான தமுமுக மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் உள்ளன அதுபோல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தங்களின் உறுப்பினர்களையும் முஸ்லிம் லீக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இடஒதுக்கீடு என்ற மிட்டாயை காட்டியே நமது சமூக ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் பெற்று வந்தன அதற்கு உடந்தையாக நமது சமுதாய அமைப்புக்களும் துணை நின்றுள்ளன. ஆனால் இது வரை இடஓதுக்கீடு என்ற பழம் தேர்தல் நேரத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்ட எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலின் போது இடஒதுக்கீடு என்ற கனியுடன் அப்பாவி முஸ்லிம் விசாரணைக்கைதிகளின் விடுதலையும் தேன்தடவிய வாக்குறுதிகளாக காட்டப்பட்டன.

இன்று திமுக பதறியேற்றவுடன் செய்த சில செயல்கள் இந்த ஆட்சியின் மீது சிறிய நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் அரசுப்பணிகளிலும், கல்வியிலும் புறக்ககணிக்கப்பட்டே வருகின்றோம். யார் நம்மை புறக்கணிக்கின்றார்களோ இல்லையோ இந்திய ஃபாசிச கும்பல்கள் நமக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த விதத்திலும் இடஓதுக்கீடு கிடைக்கக்கூடாதென்பதிலும் எந்த விதத்திலும் நமது சமூகம் உயர்கல்வி பெற்றிடக்கூடாதென்பதிலும் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்தச் சுழ்நிலையில் தமிழகத்தில் நமது சமுதாயத்தின் பாதுகாவலர்கலாக தங்களை அடையாளங்காட்டும் இயக்கத்தினர் செய்ய வேண்டிய கடமைகளாக சிலவற்றை இங்கு எடுத்து வைக்க விரும்புகின்றேன் இறைவன் நாடினால் நமது இயக்கங்கள் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்தும் என்று நம்புவோம்.

மத்திய அரசால் முஸ்லிம்களின் நிலையை கண்டு ஆராய அமைக்கப்பட்ட 'பிரதம அமைச்சரின் உயர்நிலைக்குழு' வின் தலைவர் இராஜேந்திர சச்சார் அவர்கள் கடந்த ஏப்ரல் 16ம் நாள் தனது முதல் நிலை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்கள் அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை இங்கு நம் மக்களின் கவணத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

*அரசு உதவிகள் எதுவும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.

*அரசால் நடத்தப்படும் சமூக உதவி திட்டங்கள் எதுவும் முஸ்லிம்களை சென்று அடைவதில்லை.

*கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வங்கிகள் மூலம் அரசு வழங்கும் கடன் திட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 94.9 சதவிகித முஸ்லிம்களை அரசின் எந்த உதவியும் சென்று சேர்வதில்லை.

*ஒட்டுமொத்த ஏழை முஸ்லிம்களில் 1.9 சதவிகித முஸ்லிம்களே அரசால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவு என்ற அரசு திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர் மற்றவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*நகர்ப்புரங்களில் 60 சதவிகித முஸ்லிம்களும் கிராமப்புரங்களில் 54.6 சதவிகித முஸ்லிம்களும் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*தேசிய அளவில் 40.8 சதவிகிதா முஸ்லிம்கள் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*மொத்த முஸ்லிம்களிள் கிராமங்களில் 3.1 சதவிகிதத்தினரே இளநிலைப்படிப்பை முடித்துள்ளனர்.

*மொத்த முஸ்லிம்களில் நகர்பபுரத்தில் 1.2 சதவிகிதத்தினரே முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள்.

*60.2 சதவிகித முஸ்லிம்களுக்கு நிலமே கிடையாது.

*கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது.

*ஒருவித மாச்சர்யத்திற்கு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

*பல மாநிலங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

*இப்படிப்பட்ட மாநிலங்களில் முஸ்லிம்களால் சொத்துக்களை வாங்கிடவோ விற்றிடவோ இயல்வதில்லை.

*முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அரசு உதவிகள் வேண்டுமென்ற வழங்கப்படுவதில்லை.

*முஸ்லிம்கள் அதிகமாக வாழுமிடங்களில் அரசு கல்விக்கூடங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

இதுபோல் நீழ்கின்றது இந்தக்குழுவின் அறிக்கை. ஆக அரசு இடஓதுக்கீடு அளிக்கின்றதோ இல்லையோ அரசு வேலைவாய்புக்களில் முஸ்லிம்கள் அமர்த்தப்படுகின்றார்களோ இல்லையோ நமது இயக்கங்கள் மீது கீழகண்டவை கடமைகளாகியுள்ளன இவற்றை செய்தாலே ஓரளவிற்கு நமது தேவைகளை நாமே நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தமுமுக, ததஜ, முஸ்லிம் லீக் மற்றுமுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கடமைகள் :



இன்று நமது சமுதாயப் பிரதிநிதிகள் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமர்ந்திருக்கின்ற நிலையில் ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ள இயக்கங்கள் என்ற நிலையில் தமுமுக வும் முஸ்லிம் லீக்கும் செய்ய வேண்டியவை.

முதலில் நமது சமுதாயத்தின் படித்த இளைஞர்கள் தங்கள் இயக்கங்களின் கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அடையாளங்காணப்பட வேண்டும்.
அவர்கள் கல்வி வாரியாக தரம் பிரிக்கப்படவேண்டும்.

அரசிலும் மற்ற இடங்களிளும் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகமெங்கும் காலியாகவுள்ள அரசுப்பணியிடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதை மிக எளிதாக ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தொடர்ச்சியாக கண்கானித்தாலே அறியலாம்.

அடையாளப்படுத்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான கல்வியிறிவும் திறமையும் உள்ள ஏற்கனவே தமிழகம் முழுவதும் அடையாளங்காணப்பட்ட நமது சமுதாய இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும்.

அரசில் நமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை எவ்வகையிலேனும் அப்பணியில் அமர்த்த வேண்டும். தேவையெனில் நமது சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து அவர்களின் சிபாரிசின் மூலம் இவ்விளைஞர்களை பணியில் அமர்த்திட வேண்டும்.

அதுபோல் தமிழகம் முழுவதும் உயர்நிலைக்கல்வியை முடித்துவிட்டு மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களை நமது சமுதாய இயக்கங்களின் கிளைகள் மூலம் கிராம, நகர வாரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் மேல்டிப்புக்காண கல்வி உதவித்தொகை தங்குமிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் தங்கள் ஒவ்வொரு மாவட்ட கிளை நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவ்வுதவிகள் அம்மாணவர்களுக்கு கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியை அவ்வுதவி கொண்டு தொடர்ந்திட செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை தொடாந்து உதவிகள் கிடைக்கின்றதா என்று கண்கானிக்க வேண்டும்.

இன்று நமது தமிழகத்தில் முஸ்லிம் கமுதாயத்தில் ஒரு வேதனையான நிலை நிவுகின்றது என்னவென்றால் முஸ்லிம்சமுதாயத்தின் பெண்களே அதிகம் கல்வி கற்க கூடியவர்களாகவும் ஆண்கள் அவ்வளவு தூரம் கல்வியல் நாட்டமில்லாமலும் இருக்கும் நிலை. இதை நமது இயக்கங்கள் மாற்ற முயல வேண்டும். கிராமம், கிராமமாக, நகரம் தோறும் தங்கள் இயக்கத்தின் தொண்டர்களை கொண்டு கல்வியின் அவசியத்தை நமது சமுதாய ஆண்களிடமும் இளைஞர்களிடமும் விளக்க வேண்டும் அவர்களிடம் நிலவும் வெளிநாட்டு வேலை என்ற மாயையை போக்க வேண்டும். உள்நாட்டிலேயே ஏதாவது வேலை செய்ய வற்புறுத்த வேண்டும். அதற்குண்டான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும். நமது மாணவர்களை மேற்கல்வி படிக்க ஊக்கம் கொடுக்க வேண்டும்.


தணியார் துறைகளிலும் நமது இளைஞர்களை வேலையில் அமர்த்த ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக வேண்டி தணியார் துறை வேலை வாய்ப்புகளை கணக்கிட்டு அதற்கு நமது இளைஞர்களை தோந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் அதற்கு நமது இயக்கங்கள் தமது அனைத்து அதிகாரங்களையும் பயண்படுத்த வேண்டும்.

முக்கியமாக காவல் துறைக்கும் இராணுவத்துக்கும் ஆள்
எடுக்கும் போது நமது இளைஞர்களை திரளாக சென்று விண்ணப்பிக்க செய்ய வற்புறுத்துங்கள். தமிழகத்தின் காவல்
துறையிலும் பாதுகாப்பு துறையிலும் படித்த தகுதியான நமது இளைஞர்களை வேலையில் சேர்க்க முற்படுங்கள். இந்த 5 ஆண்டுகால ஆட்சிக்குள் தமிழகத்தில் குறைந்த பட்சம் 50 முஸ்லிம்களை ஆய்வாளர், துணை ஆய்வாளர் எனவும் சுமார் 500 முஸ்லிம்களை காவலர்களாகவும் ஒன்றிரண்டு முஸ்லிம்களை உயர் மட்ட அதிகாரிகள் பணிக்கும் நியமிக்க தங்களது அனைத்து அதிகாரங்களையும பயன்படுத்தி நமது இயக்கங்கள் முயல வேண்டும். இதுவே ஒரு மாபெரும் வெற்றியாகும். இதை ஐந்து வருடங்களுக்கும் மிக எளிதாக நிறைவேற்றலாம்.



காவல்துறையிலும், இராணுவத்திலும் நமது இளைஞர்களை அதிகளவில் பணியில் சேர்ப்பதன் மூலம் குஜராத் மற்றும் கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடக்காது தவிர்க்கலாம் அல்லது இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் நமது சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையாவது ஓரளவிற்கு குறைக்கலாம். குஜராத்திலும் கோவையிலும் இவ்வளவு சேதம் சமது சமூகத்திற்கு ஏற்ப்பட்டதன் முக்கிய காரணம் காவல்துறையிலும் இரானுவத்திலும் முஸ்லிம்கள் இல்லாது போனதால் மிக எளிதாக இவர்கள் காவிமயமாக்கப்பட்டதே. ஒருவேலை நாம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இத்துறையில் இருந்திருப்போமேயானால் இவ்வளவு அழிவு நமது சமூகத்திற்கு ஏற்படாமல் தடுத்திருக்க இயலும். அதை மனதில் கொண்டு இந்த குறிப்பிட்ட துறைகளிள் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க நமது இயக்கங்கள் முயல வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு குஜராத்தோ அல்லது கோவையோ நடக்காமல் தடுக்கலாம் அல்லது கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு போல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து (அதிலும் மனநிலை பாதித்தவரும் அடக்கம்) தீவிரவாதிகளாக காட்டிய சம்பவங்களை தடுக்க இயலும். நமது சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இந்த துறையில் இருந்திருந்தால் ரத்தின சபாபதி போன்றோர் இதைச்செய்வதற்கு தயங்குவார்கள். இதற்கு நமது இயக்கங்கள் முனையவேண்டும். நமது இளைஞர்களும் இதுபோன்ற பணிகளிள் தங்களை இனைத்து கொள்ள தங்களை தயார் படுத்திட வேண்டும்.

வெளிநாட்டிற்கு அனுப்ப முனையும் பெற்றோரை எதிர்த்து தங்கள் இளமையை நமது தாய் நாட்டிற்காகவும் நமது சமுதாயத்தை பாதுகாக்கவும் தியாகம் செய்யுங்கள். இந்திய சுதந்திரத்திற்காக நமது நமுதாய முன்னோர்கள் செய்த தியாகத்தை காட்டிலும் அதிகமான தியாகம் இன்று நமது இந்திய திருநாட்டை ஃபாசிச சக்திகளிடம் மீட்க தேவைப்படுகின்றது. மீண்டும் ஓர் சுதந்திரத்தை அடையவும் நமது நாட்டை ஃபாசிச சக்திகளிடம் இருந்து மீட்கவும் நமது நாட்டின் இராணுவத்திலும் காவல்துறையிலும் தங்களை இணைத்து அனைத்து தியாகங்களுக்கும் தயாராகுங்கள். நமது இந்தியாவின் மதச்சர்பின்மையையும் இறையான்மையையும் என்றும் காப்போம்.

நம் சமுதாதாயத்தின் அழிவிற்கும் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று நமக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்களாகும். ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக கூறுவதன் மூலம் அதை உண்மைப்படுத்தலாம் சியோனிஸ்ட்டுகள் தங்கள் காரியங்களை சாதிக்கவும் தங்கள் பொய்களை உண்மைப்படுத்தவும் எதிரிகளை வெற்றி கொள்ளவும் ஊடகங்களையே தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது, முதலில் ஊடகங்கள் வாயிலாக ஈராக்கில் அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதாகவும் அதனால் உலகிற்கு பயங்கர ஆபத்தென்றும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்கள் ஊடகங்கள் வாயிலாக கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஈராக்கை ஆக்கிரமித்தனர்.

இன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், மக்களால் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என்றும் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ் உள்பட அனைத்து போராளி அமைப்புக்களையும் தீவிரவாதிகள் என்று கூறி தடைவிதித்ததோடு அதே பொய்யை தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக திரும்ப திரும்ப கூறி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்த சமயம் தனது கள்ளக்கு குழந்தை இஸ்ரேலை விட்டு குண்டு மழை பொழிய செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றது அமெரிக்கா.

இதுபோல் உலகெங்கும் நமது முஸ்லிம் இனத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு யூத, கிருத்துவ, ஃபாசிச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ஊடகம். இதன் வாயிலாகவே செசன்யாவிலும், ஃபாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும் இந்தியாவிலுமாக நமது மக்கள் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்படுகின்றார்கள் இதை வெளிக்கொணர கூட நம்மிடம் போதிய ஊடக வசதியில்லாத நிலை.

இந்தியாவில் ஃபாசிச பயங்கரவாதிகளால் முஸ்லிம் இனத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அனைத்தும் ஊடகங்களின் துணை கொண்டே செய்யப்பட்டன. மகாத்மா காந்தியை கோட்சே என்ற இந்து தீவிரவாதியை கொண்டு படுகொலை செய்து விட்டு அன்றைய ஒரே ஊடகமான ரேடியோவின் மூலம் முஸ்லிம்கள் மகாத்மாவை படுகொலை செய்துவிட்டார்கள் என்ற பொய்யை திரும்ப திரும்ப ஒலிபரப்பியதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குஜராத்தில் நடந்ததும் அதுவே ரயிலை முஸ்லிம்கள் எரித்துவிட்டார்கள் என்ற செய்தியை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்கள் மூலமும் பரப்பி திட்டமிட்டு நம்மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டார்கள். கோவையில் நடந்ததும் இதுவே இன்றும் திட்டமிட்டு தமிழகத்தில் நமது சமுதாய இளைஞர்களை ஊடகங்களின் வாயிலாக தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் ஃபாசிச பயங்கரவாதிகள் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

நாம் அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யக்கூட வக்கற்றவர்களாக உள்ளோம். நாம் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றோம் நம்மீது இனப்படுகொலை ஏவிவிடப்படுகின்றது ஃபாசிச பயங்கரவாதிகள் அரச இயந்திரங்களின் துணை கொண்டு நம்மை அழிக்கின்றர்கள் என்று நமக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிட்டு உலக மக்களின் முன் வைத்து நியாயம் தேடக்கூட உரிய ஊடகங்கள் நம்மிடம் இல்லை. நமக்கெதிராக செய்யப்படும் பொய்யபிரச்சாரங்களுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் நாம் தீவிரவாதிகள் அல்ல எல்லோரையும் போல் அப்பாவி மக்களே என்று கூறி நமக்கெதிராக நடக்கும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து நம் மக்களை விழிப்புணர்ச்சி அடைய செய்யக்கூட நம்மிடம் போதிய ஊடகங்கள் இல்லை. இருக்கும் ஓரிரு ஊடகங்களும் இயக்கம் சார்ந்தவையாக உள்ளன அவற்றிற்கு தங்கள் இயக்கங்களின் கொள்கைகளை விளக்கவும் தமக்கிடையே நடக்கும் சண்டைகளை செய்திகளாக்கி நமது சமுதாயத்தை பிளவு படுத்தவுமே பக்கங்கள் போதவில்லை.

இவற்றையெல்லாம் நாமும் நமது இயக்கங்களும் உணர வேண்டும் இன்றைய நமது சமுதாயத்தின் முக்கிய தேவை நமக்கென ஒரு செய்தி நாளிதழ் கேரளாவில் முஸ்லிம் லீக்கின் "சந்திரிக" வைப் போலவும் ஜமாத் இஸ்லாமியின் "மாத்யமம்" பத்திரிகைகளை
போலவும் தமிழகத்தில் அனைத்து தரப்பும் படிக்கக்கூடிய ஊடகம் ஒன்று நமக்கு முக்கியத்தேவை.அதுபோல் முஸ்லிம்களால் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிளும் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் போல் தமிழத்திலும் நமக்கு ஓர் தொலைக்காட்சி அலைவரிசைவேண்டும். இதையெல்லாம் நமது இயக்கங்களோ அல்லது சமூக அக்கறை மிக்க முஸ்லிம்
தொழிலதிபர்களோ ஆரம்பிக்கலாம் அப்படி செய்யும் பட்சத்தில் நமது ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



நாமும் நமது சகோதர கேரள முஸ்லிம்களை போன்று அனைத்து தரப்பினரும் வாசிக்கும் தினசரிகளையும் அனைத்து தரப்பினரும் காணும் தொலைக்காட்சி அலைவரிசையையும் கொண்டிருந்தால் நமக்கெதிராக இன்று ஊடகங்களின் துணை கொண்டு ஃபாசிச பயங்கரவாதிகளால் செய்யப்படும் பிரச்சாரங்களை முறியடிக்கலாம். நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தி தமிழகத்தின் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாறலாம். நமது சமுதாய மக்களை விழிப்படையச்செய்து நமக்கெதிராக திட்டங்கள் தீட்டி செய்ல்படுத்திவரும் ஃபாசிச பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடித்து நம் சமுதாயத்தை காக்கலாம். இதற்கு முக்கிய தேவை ஊடகங்கள். இதன் அவசியத்தை நமது சமுதாயம் கட்டாயம் உணர வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள ததஜ போன்ற நமது சமுதாய அமைப்புக்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றது என்ற நிலையில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். கோவையிலும் தமிழகத்தில் பிறபகுதிகளிளும் நடந்த சம்பவங்கள் போன்று காவல்துறையும் ஃபாசிச சக்திகளும் நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் போது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி முஸ்லிம்களின் ஓட்டுக்களால் 70க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி இதுபோன்ற அநியாயங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வலியுருத்த வேண்டும்.

அப்படி நமக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டிற்காகவும் நம்மீது நடத்தப்படும அநியாயங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்க மறுத்து நமக்கெதிராக செயல்படும் பட்சத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகி அக்கட்சி நமக்கு செய்த துரோகங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அக்கட்சிக்கெதிராக கடுமையான முறையில் போராட தயங்க கூடாது. சமீபத்தில் தனது வாக்குறுதியை மீறி முஸ்லிம்களுக்கெதிராகவும் அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராகவும் மீண்டும் பொடாவை கொண்டுவந்து முஸ்லிம்களுக்கெதிராக பிரயோகிக்க வேண்டும என்பதுபோலவும் குரல் கொடுத்து வரும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவிற்கு அவருடன் இருக்கும் நமது சமுதாய இயக்கங்கள் கண்டனம் கூட தெறிவிக்காதது மிக வருத்தமான விஷயம்.

நமக்கெதிராக அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படும்போது நாம் இயக்க பேதம் பார்க்காமல் இனம் என்ற அடிப்படையில் நமது அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் நமது பலம் என்வென்பதை நமது
எதிரிகள் உணர்வார்கள். அதைவிடுத்து விடியல்காரன்தானே என்று தமுமுக சும்மாயிருப்பதும் தமுமுக செய்யும் அனைத்தையும் குறைகூறி ததஜ சும்மாயிருப்பதும்
ஒருவர் மீது ஒருவர் போலிசில் பொய்ப்புகார் கூறுவதும் ஒருவர் பத்திரிகையில் மற்றவரின் காரியங்களை குறைகூறி மற்றவர்களை குற்றவாளிகளாக சித்தறிப்பதும் (உதாரணம் :
உணர்வின் பொதக்குடி சம்பவம் ஒரு நடுநிலை ரிப்போர்ட்) நமது சமுதாயத்தை பலகீனப்படுத்தவே செய்யும்.



கோவை சம்பவம் தொடர்பாக நியாயம் கோரி தமுமுக, மனித நீதி பாசறை போன்ற அமைப்புக்கள் ஒருங்கிணைந்து போராடவிருப்பதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன. மற்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்து போராட முயலுங்கள் ஒரு சில அமைப்புக்கள் தங்களோடு ஒருங்கிணைய மறுத்து ஃபாசிச சிந்தனையுடையோரின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருப்பதும் ஜெயலலிதா போன்றோர் ஃபாசிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்களை கூறி செயல்படும்போது அவர்களுடன் கூட்டணியல் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காது மௌனம் காப்பதும் கடுமையான சந்தேகங்களை உண்டாக்குகின்றன்.

இதுபோல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டிக்காது வியாக்கியானம் பேசி ஃபாசிச சக்திகளுக்கு துணைபோவோருடன் கூட்டணி சேர்ந்து சுயநலப்போக்கோடு செயல்படும் போலி சமூக அரசியல் இயக்கங்களின் துரோகங்களை மக்கள் மன்றத்தில் வைத்து அவர்களை தனிமைப்படுத்த நமது சமுதாயத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

இதுபோல் நமது வேதம் கூறியதைப்போன்று ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து நாம் அனைவரும் இயக்க பேதம் பாராமல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளுக்கெதிராக போராடி
ஃபாசிச சக்திகளின் செயல்களுக்கு ஒத்து ஊதும் நம்முள் இருக்கும் எட்டப்பர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை நாம் அனைவரும் இணைந்து சமுதாயப்பகிஷ்காரப்படுத்தினால் நம்முள் காட்டிக்கொடுப்பவர்களும், நமது சமுதாயத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களும் உருவாகமாட்டார்கள். நாம் அனைவரும் இனைந்து நான் மேலே கூறிய காரியங்களை ஐந்துவருட திட்டமாக செயல்படுத்தி அதில் வெற்றி பெற்றால் நாம் இடஒதுக்கீடு கேட்டு போராட தேவையில்லை, வேண்டிய இட ஒதுக்கீட்டை நாமே உருவாக்கி கொள்ளலாம்.



தமிழகத்தின் அரசியலில் முஸ்லிம்கள் தவிர்க்க இயலாத சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும். சுய லாபங்களுக்காக வெற்றி தோல்வியை தீர்மானிப்பது முஸ்லிம்கள் இல்லை அது பெரும்பான்மை சமுதாயம் என்பது போன்ற சுயநல பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தி நமது சமுதாயத்தை திசைக்கு ஒன்றாக பிற்த்து ஓட்டுக்களை சிதறடித்து பலகீனப்படுத்தும் செயல்களை நிறுத்தி தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் நாடார் சமுதாயம் மற்றும் முக்குலத்தோர் சமுதாயம் ஒருங்கிணைந்து தங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக வாக்களிக்க கூடிய கட்சியை மட்டும் ஆதரிக்கின்றதோ அதுபோல் நமது கோரிக்கைகள எந்த கட்சி நிறைவேற்றுவதாக வாக்களிக்கின்றதோ அந்தக்கட்சிக்கு மட்டும்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி என்ற ஒரு நிலையை தமிழகத்தில் நாம் கொண்டுவர முயல வேண்டும்.

அப்படி ஒரு நிலை வருமானால் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய மாபெரும் சக்தியாக ஒரே சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் அமையும் அன்று இடஒதுக்கீடு தானாக நமது கால்களில் விழுந்து கிடக்கும். நமக்கெதிராக ஜெயலலிதாக்கள் குரல் கொடுக்க தயங்குவார்கள், மாசானமுத்துக்களும், ரத்தின சபாபதிகளும் ஃபாசிச சித்தாந்தத்தை மூட்டைகட்டிவிட்டு பாய்களுக்கு பாய்விரிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை சுயநலன்களை மறந்து நாம் ஒன்று கூடினால் இன்ஷா அல்லாஹ்.. இதை இயக்கங்கள் உணர்வார்களா?

கனவுகள் நினைவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் இயக்கங்களும் மக்களும் அதற்காக ஒருங்கிணைவார்கள் இறைவன் நாடினால் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

குறிப்பு : சிறந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தின் வெற்றிக்கான தங்களது செயல்திட்டங்களை கட்டுறைகளாக்கி தருவீர்களானால் நான் இங்கு பிரசுரிக்க தயாராக உள்ளேன். என்னை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
முகவைத்தமிழன்


இயக்கங்களின் தற்போதைய கடமைகள்



தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் தற்போதைய கடமைகள்

நெடுங்காலமாக இந்தியாவை ஜாதி வெறி, மத வெறி எனும் நோய் பீடித்து வருகின்றது. ஜாதி மதம் என்ற மாயையில் வீழ்த்தி நம்முள் ஜாதி மத கலவரங்களை மூட்டி ரத்த ஆறு ஓடச்செய்து 80 சதவிகிதத்திற்கும் அதிகமான எம் இந்திய பூர்வீக குடிமக்களை ஓர் சிறிய கூட்டம் அடிமையாக நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கோடிக்கணக்கான பெருமதியுள்ள சிறுபான்மை சமுதாயத்தின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. குஜராத்தில் எம்மக்களின் குடலுறுவிய ரத்தத் தடயங்கள் மாறும் முன் இதோ மும்பையிலும் கோவையிலும் மற்றுமோர் நிகழ்வுக்கான ஆயத்தங்கள்.

இந்தச்சூழ்நிலையில் தமிழகத்தில் நம் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி மக்களை சமூக அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய நம் இயக்கங்கள் இன்று தம்மில் அடித்துக்கொண்டு அதை உலக மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றார்கள். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்தின் உரிமைக்கு குரல் கொடுக்க துவங்கப்பட்ட சில பத்திரிகைகள் தங்களின் கூட்டணி தலைவர்களின் புகழ்பாடவும் அவர்களின் ஆளுயர புகைப்படங்களை தாங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மறுமலர்ச்சி போன்ற பத்திரிகைகள் மூலையில் உறங்குகின்றன.

சமூக மறுமலர்ச்சிக்காகவும் ஒடுக்கப்பட்ட நம் இனத்தின் மீட்சிக்காகவும் துவக்கப்பட்ட பல இயக்கங்கள் தம்முள் ஏற்ப்பட்ட கலகத்தாலும் யார் பெரியவன் என்ற போட்டியில் அரசியல் சாக்கடையில் சங்கமித்ததாலும் சமூக அரசியல் பேரியக்கங்கலாகி சுய அடையாளத்தை இழந்து நிற்கின்றன. அந்தோ பரிதாபம். இந்தச்சூழ்நிலையிலும் அத்தி பூத்தாற்போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. இது வரை சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்த நமது சமுதாயத்திற்கு குறிப்பிட்டு சொல்லும் வகையில் சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் இடம் கிடைத்துள்ளது. இது உண்மையில் நம்மை மகிழ்ச்சியில் ஆழத்திய செய்தி.

அதுபோல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளின் கூட்டணியில் நமது சமுதாய இயக்கங்களான தமுமுக மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் உள்ளன அதுபோல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தங்களின் உறுப்பினர்களையும் முஸ்லிம் லீக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இடஒதுக்கீடு என்ற மிட்டாயை காட்டியே நமது சமூக ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் பெற்று வந்தன அதற்கு உடந்தையாக நமது சமுதாய அமைப்புக்களும் துணை நின்றுள்ளன. ஆனால் இது வரை இடஓதுக்கீடு என்ற பழம் தேர்தல் நேரத்தில் மட்டுமே காண்பிக்கப்பட்ட எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலின் போது இடஒதுக்கீடு என்ற கனியுடன் அப்பாவி முஸ்லிம் விசாரணைக்கைதிகளின் விடுதலையும் தேன்தடவிய வாக்குறுதிகளாக காட்டப்பட்டன.

இன்று திமுக பதறியேற்றவுடன் செய்த சில செயல்கள் இந்த ஆட்சியின் மீது சிறிய நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் அரசுப்பணிகளிலும், கல்வியிலும் புறக்ககணிக்கப்பட்டே வருகின்றோம். யார் நம்மை புறக்கணிக்கின்றார்களோ இல்லையோ இந்திய ஃபாசிச கும்பல்கள் நமக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த விதத்திலும் இடஓதுக்கீடு கிடைக்கக்கூடாதென்பதிலும் எந்த விதத்திலும் நமது சமூகம் உயர்கல்வி பெற்றிடக்கூடாதென்பதிலும் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்தச் சுழ்நிலையில் தமிழகத்தில் நமது சமுதாயத்தின் பாதுகாவலர்கலாக தங்களை அடையாளங்காட்டும் இயக்கத்தினர் செய்ய வேண்டிய கடமைகளாக சிலவற்றை இங்கு எடுத்து வைக்க விரும்புகின்றேன் இறைவன் நாடினால் நமது இயக்கங்கள் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்தும் என்று நம்புவோம்.

மத்திய அரசால் முஸ்லிம்களின் நிலையை கண்டு ஆராய அமைக்கப்பட்ட 'பிரதம அமைச்சரின் உயர்நிலைக்குழு' வின் தலைவர் இராஜேந்திர சச்சார் அவர்கள் கடந்த ஏப்ரல் 16ம் நாள் தனது முதல் நிலை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்கள் அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை இங்கு நம் மக்களின் கவணத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

*அரசு உதவிகள் எதுவும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.

*அரசால் நடத்தப்படும் சமூக உதவி திட்டங்கள் எதுவும் முஸ்லிம்களை சென்று அடைவதில்லை.

*கல்வியிலும் வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வங்கிகள் மூலம் அரசு வழங்கும் கடன் திட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 94.9 சதவிகித முஸ்லிம்களை அரசின் எந்த உதவியும் சென்று சேர்வதில்லை.

*ஒட்டுமொத்த ஏழை முஸ்லிம்களில் 1.9 சதவிகித முஸ்லிம்களே அரசால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச உணவு என்ற அரசு திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர் மற்றவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

*நகர்ப்புரங்களில் 60 சதவிகித முஸ்லிம்களும் கிராமப்புரங்களில் 54.6 சதவிகித முஸ்லிம்களும் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*தேசிய அளவில் 40.8 சதவிகிதா முஸ்லிம்கள் கல்விக்கூடங்களுக்கே சென்றதில்லை.

*மொத்த முஸ்லிம்களிள் கிராமங்களில் 3.1 சதவிகிதத்தினரே இளநிலைப்படிப்பை முடித்துள்ளனர்.

*மொத்த முஸ்லிம்களில் நகர்பபுரத்தில் 1.2 சதவிகிதத்தினரே முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள்.

*60.2 சதவிகித முஸ்லிம்களுக்கு நிலமே கிடையாது.

*கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது.

*ஒருவித மாச்சர்யத்திற்கு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

*பல மாநிலங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

*இப்படிப்பட்ட மாநிலங்களில் முஸ்லிம்களால் சொத்துக்களை வாங்கிடவோ விற்றிடவோ இயல்வதில்லை.

*முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அரசு உதவிகள் வேண்டுமென்ற வழங்கப்படுவதில்லை.

*முஸ்லிம்கள் அதிகமாக வாழுமிடங்களில் அரசு கல்விக்கூடங்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

இதுபோல் நீழ்கின்றது இந்தக்குழுவின் அறிக்கை. ஆக அரசு இடஓதுக்கீடு அளிக்கின்றதோ இல்லையோ அரசு வேலைவாய்புக்களில் முஸ்லிம்கள் அமர்த்தப்படுகின்றார்களோ இல்லையோ நமது இயக்கங்கள் மீது கீழகண்டவை கடமைகளாகியுள்ளன இவற்றை செய்தாலே ஓரளவிற்கு நமது தேவைகளை நாமே நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தமுமுக, ததஜ, முஸ்லிம் லீக் மற்றுமுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் கடமைகள் :



இன்று நமது சமுதாயப் பிரதிநிதிகள் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமர்ந்திருக்கின்ற நிலையில் ஆளுங்கட்சியோடு கூட்டணியில் உள்ள இயக்கங்கள் என்ற நிலையில் தமுமுக வும் முஸ்லிம் லீக்கும் செய்ய வேண்டியவை.

முதலில் நமது சமுதாயத்தின் படித்த இளைஞர்கள் தங்கள் இயக்கங்களின் கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அடையாளங்காணப்பட வேண்டும்.
அவர்கள் கல்வி வாரியாக தரம் பிரிக்கப்படவேண்டும்.

அரசிலும் மற்ற இடங்களிளும் தங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகமெங்கும் காலியாகவுள்ள அரசுப்பணியிடங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதை மிக எளிதாக ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தொடர்ச்சியாக கண்கானித்தாலே அறியலாம்.

அடையாளப்படுத்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான கல்வியிறிவும் திறமையும் உள்ள ஏற்கனவே தமிழகம் முழுவதும் அடையாளங்காணப்பட்ட நமது சமுதாய இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும்.

அரசில் நமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை எவ்வகையிலேனும் அப்பணியில் அமர்த்த வேண்டும். தேவையெனில் நமது சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து அவர்களின் சிபாரிசின் மூலம் இவ்விளைஞர்களை பணியில் அமர்த்திட வேண்டும்.

அதுபோல் தமிழகம் முழுவதும் உயர்நிலைக்கல்வியை முடித்துவிட்டு மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்களை நமது சமுதாய இயக்கங்களின் கிளைகள் மூலம் கிராம, நகர வாரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் மேல்டிப்புக்காண கல்வி உதவித்தொகை தங்குமிட வசதி போன்ற அனைத்து வசதிகளும் தங்கள் ஒவ்வொரு மாவட்ட கிளை நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவ்வுதவிகள் அம்மாணவர்களுக்கு கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியை அவ்வுதவி கொண்டு தொடர்ந்திட செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை தொடாந்து உதவிகள் கிடைக்கின்றதா என்று கண்கானிக்க வேண்டும்.

இன்று நமது தமிழகத்தில் முஸ்லிம் கமுதாயத்தில் ஒரு வேதனையான நிலை நிவுகின்றது என்னவென்றால் முஸ்லிம்சமுதாயத்தின் பெண்களே அதிகம் கல்வி கற்க கூடியவர்களாகவும் ஆண்கள் அவ்வளவு தூரம் கல்வியல் நாட்டமில்லாமலும் இருக்கும் நிலை. இதை நமது இயக்கங்கள் மாற்ற முயல வேண்டும். கிராமம், கிராமமாக, நகரம் தோறும் தங்கள் இயக்கத்தின் தொண்டர்களை கொண்டு கல்வியின் அவசியத்தை நமது சமுதாய ஆண்களிடமும் இளைஞர்களிடமும் விளக்க வேண்டும் அவர்களிடம் நிலவும் வெளிநாட்டு வேலை என்ற மாயையை போக்க வேண்டும். உள்நாட்டிலேயே ஏதாவது வேலை செய்ய வற்புறுத்த வேண்டும். அதற்குண்டான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும். நமது மாணவர்களை மேற்கல்வி படிக்க ஊக்கம் கொடுக்க வேண்டும்.


தணியார் துறைகளிலும் நமது இளைஞர்களை வேலையில் அமர்த்த ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக வேண்டி தணியார் துறை வேலை வாய்ப்புகளை கணக்கிட்டு அதற்கு நமது இளைஞர்களை தோந்தெடுத்து பணியில் அமர்த்த வேண்டும் அதற்கு நமது இயக்கங்கள் தமது அனைத்து அதிகாரங்களையும் பயண்படுத்த வேண்டும்.

முக்கியமாக காவல் துறைக்கும் இராணுவத்துக்கும் ஆள்
எடுக்கும் போது நமது இளைஞர்களை திரளாக சென்று விண்ணப்பிக்க செய்ய வற்புறுத்துங்கள். தமிழகத்தின் காவல்
துறையிலும் பாதுகாப்பு துறையிலும் படித்த தகுதியான நமது இளைஞர்களை வேலையில் சேர்க்க முற்படுங்கள். இந்த 5 ஆண்டுகால ஆட்சிக்குள் தமிழகத்தில் குறைந்த பட்சம் 50 முஸ்லிம்களை ஆய்வாளர், துணை ஆய்வாளர் எனவும் சுமார் 500 முஸ்லிம்களை காவலர்களாகவும் ஒன்றிரண்டு முஸ்லிம்களை உயர் மட்ட அதிகாரிகள் பணிக்கும் நியமிக்க தங்களது அனைத்து அதிகாரங்களையும பயன்படுத்தி நமது இயக்கங்கள் முயல வேண்டும். இதுவே ஒரு மாபெரும் வெற்றியாகும். இதை ஐந்து வருடங்களுக்கும் மிக எளிதாக நிறைவேற்றலாம்.



காவல்துறையிலும், இராணுவத்திலும் நமது இளைஞர்களை அதிகளவில் பணியில் சேர்ப்பதன் மூலம் குஜராத் மற்றும் கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடக்காது தவிர்க்கலாம் அல்லது இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் நமது சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையாவது ஓரளவிற்கு குறைக்கலாம். குஜராத்திலும் கோவையிலும் இவ்வளவு சேதம் சமது சமூகத்திற்கு ஏற்ப்பட்டதன் முக்கிய காரணம் காவல்துறையிலும் இரானுவத்திலும் முஸ்லிம்கள் இல்லாது போனதால் மிக எளிதாக இவர்கள் காவிமயமாக்கப்பட்டதே. ஒருவேலை நாம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இத்துறையில் இருந்திருப்போமேயானால் இவ்வளவு அழிவு நமது சமூகத்திற்கு ஏற்படாமல் தடுத்திருக்க இயலும். அதை மனதில் கொண்டு இந்த குறிப்பிட்ட துறைகளிள் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க நமது இயக்கங்கள் முயல வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஒரு குஜராத்தோ அல்லது கோவையோ நடக்காமல் தடுக்கலாம் அல்லது கோவையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு போல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து (அதிலும் மனநிலை பாதித்தவரும் அடக்கம்) தீவிரவாதிகளாக காட்டிய சம்பவங்களை தடுக்க இயலும். நமது சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இந்த துறையில் இருந்திருந்தால் ரத்தின சபாபதி போன்றோர் இதைச்செய்வதற்கு தயங்குவார்கள். இதற்கு நமது இயக்கங்கள் முனையவேண்டும். நமது இளைஞர்களும் இதுபோன்ற பணிகளிள் தங்களை இனைத்து கொள்ள தங்களை தயார் படுத்திட வேண்டும்.

வெளிநாட்டிற்கு அனுப்ப முனையும் பெற்றோரை எதிர்த்து தங்கள் இளமையை நமது தாய் நாட்டிற்காகவும் நமது சமுதாயத்தை பாதுகாக்கவும் தியாகம் செய்யுங்கள். இந்திய சுதந்திரத்திற்காக நமது நமுதாய முன்னோர்கள் செய்த தியாகத்தை காட்டிலும் அதிகமான தியாகம் இன்று நமது இந்திய திருநாட்டை ஃபாசிச சக்திகளிடம் மீட்க தேவைப்படுகின்றது. மீண்டும் ஓர் சுதந்திரத்தை அடையவும் நமது நாட்டை ஃபாசிச சக்திகளிடம் இருந்து மீட்கவும் நமது நாட்டின் இராணுவத்திலும் காவல்துறையிலும் தங்களை இணைத்து அனைத்து தியாகங்களுக்கும் தயாராகுங்கள். நமது இந்தியாவின் மதச்சர்பின்மையையும் இறையான்மையையும் என்றும் காப்போம்.

நம் சமுதாதாயத்தின் அழிவிற்கும் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று நமக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் தொடர்ச்சியான பொய்ப்பிரச்சாரங்களாகும். ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக கூறுவதன் மூலம் அதை உண்மைப்படுத்தலாம் சியோனிஸ்ட்டுகள் தங்கள் காரியங்களை சாதிக்கவும் தங்கள் பொய்களை உண்மைப்படுத்தவும் எதிரிகளை வெற்றி கொள்ளவும் ஊடகங்களையே தங்களின் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது, முதலில் ஊடகங்கள் வாயிலாக ஈராக்கில் அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதாகவும் அதனால் உலகிற்கு பயங்கர ஆபத்தென்றும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப தங்கள் ஊடகங்கள் வாயிலாக கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஈராக்கை ஆக்கிரமித்தனர்.

இன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், மக்களால் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என்றும் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ் உள்பட அனைத்து போராளி அமைப்புக்களையும் தீவிரவாதிகள் என்று கூறி தடைவிதித்ததோடு அதே பொய்யை தங்களிடம் உள்ள ஊடகங்கள் வாயிலாக திரும்ப திரும்ப கூறி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்த சமயம் தனது கள்ளக்கு குழந்தை இஸ்ரேலை விட்டு குண்டு மழை பொழிய செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றது அமெரிக்கா.

இதுபோல் உலகெங்கும் நமது முஸ்லிம் இனத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு யூத, கிருத்துவ, ஃபாசிச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் ஊடகம். இதன் வாயிலாகவே செசன்யாவிலும், ஃபாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும் இந்தியாவிலுமாக நமது மக்கள் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்படுகின்றார்கள் இதை வெளிக்கொணர கூட நம்மிடம் போதிய ஊடக வசதியில்லாத நிலை.

இந்தியாவில் ஃபாசிச பயங்கரவாதிகளால் முஸ்லிம் இனத்தின் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அனைத்தும் ஊடகங்களின் துணை கொண்டே செய்யப்பட்டன. மகாத்மா காந்தியை கோட்சே என்ற இந்து தீவிரவாதியை கொண்டு படுகொலை செய்து விட்டு அன்றைய ஒரே ஊடகமான ரேடியோவின் மூலம் முஸ்லிம்கள் மகாத்மாவை படுகொலை செய்துவிட்டார்கள் என்ற பொய்யை திரும்ப திரும்ப ஒலிபரப்பியதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குஜராத்தில் நடந்ததும் அதுவே ரயிலை முஸ்லிம்கள் எரித்துவிட்டார்கள் என்ற செய்தியை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்கள் மூலமும் பரப்பி திட்டமிட்டு நம்மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டார்கள். கோவையில் நடந்ததும் இதுவே இன்றும் திட்டமிட்டு தமிழகத்தில் நமது சமுதாய இளைஞர்களை ஊடகங்களின் வாயிலாக தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் ஃபாசிச பயங்கரவாதிகள் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

நாம் அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யக்கூட வக்கற்றவர்களாக உள்ளோம். நாம் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றோம் நம்மீது இனப்படுகொலை ஏவிவிடப்படுகின்றது ஃபாசிச பயங்கரவாதிகள் அரச இயந்திரங்களின் துணை கொண்டு நம்மை அழிக்கின்றர்கள் என்று நமக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிட்டு உலக மக்களின் முன் வைத்து நியாயம் தேடக்கூட உரிய ஊடகங்கள் நம்மிடம் இல்லை. நமக்கெதிராக செய்யப்படும் பொய்யபிரச்சாரங்களுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் நாம் தீவிரவாதிகள் அல்ல எல்லோரையும் போல் அப்பாவி மக்களே என்று கூறி நமக்கெதிராக நடக்கும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து நம் மக்களை விழிப்புணர்ச்சி அடைய செய்யக்கூட நம்மிடம் போதிய ஊடகங்கள் இல்லை. இருக்கும் ஓரிரு ஊடகங்களும் இயக்கம் சார்ந்தவையாக உள்ளன அவற்றிற்கு தங்கள் இயக்கங்களின் கொள்கைகளை விளக்கவும் தமக்கிடையே நடக்கும் சண்டைகளை செய்திகளாக்கி நமது சமுதாயத்தை பிளவு படுத்தவுமே பக்கங்கள் போதவில்லை.

இவற்றையெல்லாம் நாமும் நமது இயக்கங்களும் உணர வேண்டும் இன்றைய நமது சமுதாயத்தின் முக்கிய தேவை நமக்கென ஒரு செய்தி நாளிதழ் கேரளாவில் முஸ்லிம் லீக்கின் "சந்திரிக" வைப் போலவும் ஜமாத் இஸ்லாமியின் "மாத்யமம்" பத்திரிகைகளை
போலவும் தமிழகத்தில் அனைத்து தரப்பும் படிக்கக்கூடிய ஊடகம் ஒன்று நமக்கு முக்கியத்தேவை.அதுபோல் முஸ்லிம்களால் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிளும் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் போல் தமிழத்திலும் நமக்கு ஓர் தொலைக்காட்சி அலைவரிசைவேண்டும். இதையெல்லாம் நமது இயக்கங்களோ அல்லது சமூக அக்கறை மிக்க முஸ்லிம்
தொழிலதிபர்களோ ஆரம்பிக்கலாம் அப்படி செய்யும் பட்சத்தில் நமது ஒட்டுமொத்த சமுதாயமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



நாமும் நமது சகோதர கேரள முஸ்லிம்களை போன்று அனைத்து தரப்பினரும் வாசிக்கும் தினசரிகளையும் அனைத்து தரப்பினரும் காணும் தொலைக்காட்சி அலைவரிசையையும் கொண்டிருந்தால் நமக்கெதிராக இன்று ஊடகங்களின் துணை கொண்டு ஃபாசிச பயங்கரவாதிகளால் செய்யப்படும் பிரச்சாரங்களை முறியடிக்கலாம். நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தி தமிழகத்தின் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாறலாம். நமது சமுதாய மக்களை விழிப்படையச்செய்து நமக்கெதிராக திட்டங்கள் தீட்டி செய்ல்படுத்திவரும் ஃபாசிச பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடித்து நம் சமுதாயத்தை காக்கலாம். இதற்கு முக்கிய தேவை ஊடகங்கள். இதன் அவசியத்தை நமது சமுதாயம் கட்டாயம் உணர வேண்டும்.

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள ததஜ போன்ற நமது சமுதாய அமைப்புக்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றது என்ற நிலையில் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். கோவையிலும் தமிழகத்தில் பிறபகுதிகளிளும் நடந்த சம்பவங்கள் போன்று காவல்துறையும் ஃபாசிச சக்திகளும் நமது சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் போது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி முஸ்லிம்களின் ஓட்டுக்களால் 70க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி இதுபோன்ற அநியாயங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வலியுருத்த வேண்டும்.

அப்படி நமக்கு ஆதரவாக இடஒதுக்கீட்டிற்காகவும் நம்மீது நடத்தப்படும அநியாயங்களுக்கெதிராகவும் குரல் கொடுக்க மறுத்து நமக்கெதிராக செயல்படும் பட்சத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகி அக்கட்சி நமக்கு செய்த துரோகங்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அக்கட்சிக்கெதிராக கடுமையான முறையில் போராட தயங்க கூடாது. சமீபத்தில் தனது வாக்குறுதியை மீறி முஸ்லிம்களுக்கெதிராகவும் அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராகவும் மீண்டும் பொடாவை கொண்டுவந்து முஸ்லிம்களுக்கெதிராக பிரயோகிக்க வேண்டும என்பதுபோலவும் குரல் கொடுத்து வரும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவிற்கு அவருடன் இருக்கும் நமது சமுதாய இயக்கங்கள் கண்டனம் கூட தெறிவிக்காதது மிக வருத்தமான விஷயம்.

நமக்கெதிராக அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படும்போது நாம் இயக்க பேதம் பார்க்காமல் இனம் என்ற அடிப்படையில் நமது அனைத்து அரசியல் சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் நமது பலம் என்வென்பதை நமது
எதிரிகள் உணர்வார்கள். அதைவிடுத்து விடியல்காரன்தானே என்று தமுமுக சும்மாயிருப்பதும் தமுமுக செய்யும் அனைத்தையும் குறைகூறி ததஜ சும்மாயிருப்பதும்
ஒருவர் மீது ஒருவர் போலிசில் பொய்ப்புகார் கூறுவதும் ஒருவர் பத்திரிகையில் மற்றவரின் காரியங்களை குறைகூறி மற்றவர்களை குற்றவாளிகளாக சித்தறிப்பதும் (உதாரணம் :
உணர்வின் பொதக்குடி சம்பவம் ஒரு நடுநிலை ரிப்போர்ட்) நமது சமுதாயத்தை பலகீனப்படுத்தவே செய்யும்.



கோவை சம்பவம் தொடர்பாக நியாயம் கோரி தமுமுக, மனித நீதி பாசறை போன்ற அமைப்புக்கள் ஒருங்கிணைந்து போராடவிருப்பதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன. மற்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்து போராட முயலுங்கள் ஒரு சில அமைப்புக்கள் தங்களோடு ஒருங்கிணைய மறுத்து ஃபாசிச சிந்தனையுடையோரின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருப்பதும் ஜெயலலிதா போன்றோர் ஃபாசிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்களை கூறி செயல்படும்போது அவர்களுடன் கூட்டணியல் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காது மௌனம் காப்பதும் கடுமையான சந்தேகங்களை உண்டாக்குகின்றன்.

இதுபோல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டிக்காது வியாக்கியானம் பேசி ஃபாசிச சக்திகளுக்கு துணைபோவோருடன் கூட்டணி சேர்ந்து சுயநலப்போக்கோடு செயல்படும் போலி சமூக அரசியல் இயக்கங்களின் துரோகங்களை மக்கள் மன்றத்தில் வைத்து அவர்களை தனிமைப்படுத்த நமது சமுதாயத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.

இதுபோல் நமது வேதம் கூறியதைப்போன்று ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து நாம் அனைவரும் இயக்க பேதம் பாராமல் நமக்கெதிராக நடக்கும் அநீதிகளுக்கெதிராக போராடி
ஃபாசிச சக்திகளின் செயல்களுக்கு ஒத்து ஊதும் நம்முள் இருக்கும் எட்டப்பர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை நாம் அனைவரும் இணைந்து சமுதாயப்பகிஷ்காரப்படுத்தினால் நம்முள் காட்டிக்கொடுப்பவர்களும், நமது சமுதாயத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களும் உருவாகமாட்டார்கள். நாம் அனைவரும் இனைந்து நான் மேலே கூறிய காரியங்களை ஐந்துவருட திட்டமாக செயல்படுத்தி அதில் வெற்றி பெற்றால் நாம் இடஒதுக்கீடு கேட்டு போராட தேவையில்லை, வேண்டிய இட ஒதுக்கீட்டை நாமே உருவாக்கி கொள்ளலாம்.



தமிழகத்தின் அரசியலில் முஸ்லிம்கள் தவிர்க்க இயலாத சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும். சுய லாபங்களுக்காக வெற்றி தோல்வியை தீர்மானிப்பது முஸ்லிம்கள் இல்லை அது பெரும்பான்மை சமுதாயம் என்பது போன்ற சுயநல பேச்சுக்களையும் அறிக்கைகளையும் நிறுத்தி நமது சமுதாயத்தை திசைக்கு ஒன்றாக பிற்த்து ஓட்டுக்களை சிதறடித்து பலகீனப்படுத்தும் செயல்களை நிறுத்தி தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் நாடார் சமுதாயம் மற்றும் முக்குலத்தோர் சமுதாயம் ஒருங்கிணைந்து தங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக வாக்களிக்க கூடிய கட்சியை மட்டும் ஆதரிக்கின்றதோ அதுபோல் நமது கோரிக்கைகள எந்த கட்சி நிறைவேற்றுவதாக வாக்களிக்கின்றதோ அந்தக்கட்சிக்கு மட்டும்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி என்ற ஒரு நிலையை தமிழகத்தில் நாம் கொண்டுவர முயல வேண்டும்.

அப்படி ஒரு நிலை வருமானால் தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய மாபெரும் சக்தியாக ஒரே சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் அமையும் அன்று இடஒதுக்கீடு தானாக நமது கால்களில் விழுந்து கிடக்கும். நமக்கெதிராக ஜெயலலிதாக்கள் குரல் கொடுக்க தயங்குவார்கள், மாசானமுத்துக்களும், ரத்தின சபாபதிகளும் ஃபாசிச சித்தாந்தத்தை மூட்டைகட்டிவிட்டு பாய்களுக்கு பாய்விரிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை சுயநலன்களை மறந்து நாம் ஒன்று கூடினால் இன்ஷா அல்லாஹ்.. இதை இயக்கங்கள் உணர்வார்களா?

கனவுகள் நினைவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் இயக்கங்களும் மக்களும் அதற்காக ஒருங்கிணைவார்கள் இறைவன் நாடினால் என்ற நம்பிக்கையில் முடிக்கின்றேன்.

குறிப்பு : சிறந்த அறிஞர்களும் சிந்தனையாளர்களும் நமது சமூகத்தில் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தின் வெற்றிக்கான தங்களது செயல்திட்டங்களை கட்டுறைகளாக்கி தருவீர்களானால் நான் இங்கு பிரசுரிக்க தயாராக உள்ளேன். என்னை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
முகவைத்தமிழன்


மும்பையை மறு குஜராத்தாக்குவதற்கு திட்டமா?




மும்பையை குஜராத்தாக்குவதற்கு ஃபாசிஸ்ட்டுகளின் திட்டமா?


"வன்முறை என்பது மதங்களின் கோட்பாடோ கொள்கையோ அல்ல.....எந்த ஒரு மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை மாறாக வன்முறை என்பது தனிப்பட்ட நபர்களின்
சித்தாந்தங்களினால் உண்டான விருப்பு வெறுப்புக்களின் கோர வெளிப்பாடே..... எந்த ஒரு அரசியல் காரணம் கொண்டும் அப்பாவி பொதுமக்கள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளையும் கொலைத்தாக்குதல்களையும் நியாயப்படுத்துதல் ஆகாது."


நேற்று (11-07-2006) மாலை 6 மணியளவில் மும்பையில் பல்வேறு இடங்களிள் அப்பாவி பொதுமக்கள் மீது ஆன்மையற்ற மனநோய் பிடித்தவர்களால் நடத்தப்பட்ட கோழைத்தனமான கொடூர தாக்குதல்களினால் இதுவரை 190 க்கும் அதிகமானோர் அக்கிரமாமாக கொல்லப்பட்டும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமாகியும் உள்ளார்கள்.

யுத்தமல்லாத சமாதான நேரத்தில் அமைதியான ஒரு நகரில் அப்பாவிகள் மற்றும் சாதாரண ஆயுதம் தறிக்காத பொது மக்கள் மீது காட்டுமிரண்டித்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலியானவர்கள் அனைவரும் தனிப்பட்ட ஒரு இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவர்கள் அல்ல மாறாக இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள் என அனைத்து தரப்பு அப்பாவி பொதுமக்களும் இதில் அடங்குவர். இது மாபெரும் குற்றமாகும் இதைச்செய்தவர்கள் யாராக இருந்தாலும் பார பட்சமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அதே சமயத்தில் இவர்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இக்குற்றவாளிகள் சார்ந்திருக்கும் சமுதாயம் எவ்வகையிலும் இவர்களின் மனிதநேயமற்ற செயல்களுக்கு காரணமாகாது. இம்மணநோய் பிடித்த சித்தாந்தவாதிகள் மத பேதமின்றி வன்மையாக கன்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் "லஷ்கர்-இ-தொய்யிபா", "ஜெயஸ்-இ-முகம்மத்" போன்ற போர்வை கொண்டு மூடி நீர்த்துப்போகச் செய்திடாமல் இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு, நாட்டின் இறையான்மை மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரணை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும்.

இது போன்ற தொடர் குண்டுவெடிப்புகளின் மூலம் அதிகமான
உயிர்சேதத்தையும் பொருளாதார நஷ்ட்டங்களையும் ஏற்படுத்த வேண்டுமானால் மிக நுணுக்கமான திட்டமிடுதலும் அதைச்செயல் படுத்துவதற்காக வேண்டி மதங்களின் பெயரில் தனிப்பட்ட சிலரின் சுய சித்தாந்தங்களால் மூலைச்சலவை செய்யபட்ட ஆக்ரோசமான இளைஞர்களும், அதையும் விட அவசியத்தேவையாக உள்ளுர் தொடர்புகளும் அரசியல் பின்புலமும் இருந்தாக வேண்டும். இதுபோன்ற திறமைகள் உலகிலேயே சில இயக்கங்களிடம் தான் உள்ளன அத்தகைய இயக்கங்களில் இந்தியாவில் இயங்கிவரும்
ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா,
பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களும் உள்ளடங்கும்.


கடந்த 1993 ம் ஆன்டு சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலைவெறி தாக்குதலுக்கு பின் நடந்த இது போன்ற தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அப்போது கூட இவர்களாளல் தாக்கப்பட்டவை இதுபோன்ற அப்பாவி பொதுமக்கள் பயணம் செய்யும் புகைவண்டிகள் அல்ல. மாறாக அரசின் அதிகார மையங்களும் வாத்தக மையங்களும் தான்.

அப்போது இதுபோன்றே தொடர் குண்டுவெடிப்புக்கள் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன. அதிகமான பொருளிழப்பும் உயிரிழப்பும் ஏற்படுத்தப்பட்டன. இதைச்செயல் படுத்தியவர்கள் அன்றைய பம்பாயில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் பம்பாய் நகரின் ஒவ்வொரு அசைவும் இவர்களின் சுட்டுவிரல் கொன்டு தீர்மானிக்கப்பட்டன. தாவுத் இபுறாஹிம், டைகர் மேமன், அபு சலீம் போன்றோர் அன்றைய அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு அண்டர்கிரவுன்ட் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள் மற்றும் இவர்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை நமது எதிரி நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ வழங்கியது மற்றும் அதைச்செயல்படுத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை தங்களிடம் கொண்டிருந்தார்கள். அதன் விளைவே பம்பாய் தொடர் குண்டுவெடிப்புக்களும் அப்பாவி பொதுமக்கள் சாவுகளும். அதன் பின்னர் இவர்கள் இந்திய அரசால் களையெடுக்கப்பட்டார்கள்.

சரிந்து வரும் தங்களின் ஆதரவை நிலை நிறுத்தவும், அரசியல், பொருளாதார ரீதியல் தங்கள் பலத்தை பெருக்கவும், உற்சாகமிழக்கும் தங்கள் தொண்டர்களை உற்சாக மூட்டவும் ஒற்றுமையாக இணைந்து வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடச்செய்து மேற்கூறியவற்றை சாதிப்பதற்காக வேண்டி இதுபோன்ற கோரப்படுகொலைகளை செய்யத் தயங்காதவர்கள் தான் இந்த ஹெட்கோவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற இயக்கத்தினர்.

இவர்களிடம் மிக நுணுக்கமாக திட்டமிடக்கூடிய பல முன்னால் இரானுவ மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட குழு உள்ளது. இதுபோன்ற காரியங்களை செயல்படுத்துவதற்காக வேண்டி இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டு ஹெட்கேவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொன்டர்களும் உள்ளனர்.

ஓவ்வொரு முறை தங்களின் செல்வாக்கு சரியும் போதும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று என்னும்போதும் இதுபோன்ற கொடூரமான கொலைகளை நிகழ்த்தி அதைக்கொன்டு சிறுபான்மையின் மக்கள் மீது கொடூர கொலைவெறித்தாக்குதல்களை நடத்தி தங்களை அரசியல் பொருளாதார ரீதியாக நிலைப்படுத்தி கொள்வார்கள். இந்த ஹெட்கேவர் என்ற தீவரவாதியின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கோட்சே என்பவனைக் கொண்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை படுகொலை செய்தார்கள் ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்ற இந்த பாசிச சக்திகளின் தலைமையில் இயங்கி வந்த அன்றைய தீவிரவாதக்குழுவினர். தேசப்பிதாவை கொன்றுவிட்டு அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற பொய்ச்செய்தியை தங்களிடம் இருந்த ஊடகங்கள் வாயிலாக பரப்பினர். (இதற்காகவே திட்டமிட்டு அன்றைய முக்கிய ஊடகங்களான ரேடியோ நிலையங்களில் இந்த தீவிரவாத சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்டவர்களும் ஆதரவாளர்களும் ஊடுருவச்செய்யபட்டிருந்தனர்) அதன் மூலம் மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் கொல்லப்பட்டன மேலும் பல்லாயிரக்கனக்கானோர் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக துரத்தப்பட்டனர்.

இது போன்றே ஒவ்வொரு முறையும் நம் நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்கள் கொல்லப்படும்போதும் அதற்கு முன்காரணியாக ஏதேனும் ஒரு சம்பவம் நடத்தி அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு அதை சிறுபான்மை சமுதாயத்தின் மீது சுமத்தி அச்சமூகத்தினர் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைக்குள்ளாக்க பட்டுள்ளார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றை நிகழ்த்தி அதில் சில உயிர்களை கொன்று அப்பழியை ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம் சமுதாயத்தின் மீது இட்டு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி இச்சமூகத்தினர் மீது இந்த ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கும்பலின் மூலம் கொடூர தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்க்ள. இதற்கு தீவிரவாதி ஹெட்கேவரின் சீடர்களான் அன்றைய உள்துறை அமச்சர் அத்வானி, பிரதமர் வாஜபாய் போன்றோரின் ஆசியுடன் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடி நரகாசுரனாக மாறி தனது அரசின் அனைத்து இயந்திரங்களையும் திட்டமிட்டபடி ஈடுபடுத்தி இம்முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரசு இயந்திரங்களும் இதற்கு துணைபோயின எதிர்ப்பு தெரிவித்த நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். மனிதாபிமானமற்ற மனிதப்படுகொலைகளை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இந்த ஃபாசிச பயங்கரவாதிகள் நடத்தினர். நாட்டின் ஜனாதிபதியால் கூட அவற்றை தடுத்து நிறுத்திட இயலவில்லை. சமூக ஒற்றுமை பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசிவரும் இந்திய அரசின் முகத்தில் மேலை நாடுகள் காறி உமிழ்ந்தன. உலகையே உலுக்கிய படுகொலைகளும் மாபாதகச்செயல்களும் அரச பயங்கரவாதமும் தேசபக்தி என்ற பெயரிலும் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரிலும் அரங்கேற்றப்பட்டன.

மிக கவனமாக திட்டமிடப்பட்டு குஜராத்தின் முஸ்லிம்
இனத்தை சேர்ந்த கல்விமான்கள், வங்கி முகாமையாளர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பல்கலைக் கழக
மாணவர்கள், பட்டதாரிகள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பல வகையான புத்திஜீவிகளை அடையாளப்படுத்தி அழித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சொந்த மண்ணில் இம்மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவையனைத்தும் இந்த மதவெறிகொண்ட ஹெட்கோவரின் சீடர்களால் மிக கவனமாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது.


இப்பாசிச கும்பலின் தீவிரவாதச்செயல்கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிந்தது. இந்தியாவின் மதச்சார்பின்மை உலக அரங்கில் நகைப்பிற்குறியதாகியது. அப்படிப்பட்ட கொடூரங்கள் குஜராத்தில் அரங்கேற்றப்பட்டன. கற்பினியின் வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்த கருவை எடுத்து நெருப்பில் வீசினார்கள். சொந்த தந்தை, சகோதரன், கணவன், மகனின் கண் முன்னே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இவர்களின் பெண்மை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள் அணிவகுக்க செய்யப்பட்டு குழந்தைகள் முதியோர் என்ற பாகுபாடின்றி படுகொலை செய்யப்பட்டு வீதியோரங்களிளும் வீடுகளிலும் எரிக்கப்பட்டார்கள். இறந்த மனித சடலங்களுக்குறிய மறியாதை கூட வழங்கப்படாமல் அவை எரிந்த மரத்தின் அடிப்பாகங்கள் போல் குஜராத்தின் வீதியெங்கும் வீசியெறியப்பட்டும் வீடுகளிள் குவிக்கப்பட்டும் கிடந்தன.

குஜராதின் வீதிகளிள் பிடித்து செல்லப்பட்ட நுற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கத்தியால் குத்தியும், வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டு டயர் போட்டு வீதிக்குக் குறுக்கே எரித்த கோரச் சம்பவம் இவ்வுலக மக்கள் மத்தியில் என்றும் மனதை விட்டு மாறாத வடுக்களாகப் பதிந்துள்ளது. முஸ்லிம் இனப்பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், முதியோர்களும் வீதியோரங்களில் படுகொலை செய்து மரங்களைக் குவிப்பது போன்று சடலங்கங்கள் எரிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட சடலங்கள் சுருண்ட வடிவில் எரிக்கப்பட்ட கட்டைகள் போன்று காணப்பட்டது. இவ்வாறு மனிதப் பெறுமதியையும், பண்பாடும் காலத்திற்குக் காலம் அருகிக் கொண்டு சென்றது. இதற்கு முழுநேரப் பங்காளிகளாக வி.எச்.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்தீவிரவாதிகளுடன் அன்றைய இந்திய நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ரதயாத்திரைகள் நடத்தி ரத்த ஆறுகளை ஓடவிட்டவருமான அத்வானியும் மற்றும் மோடி அரசாங்கத்தின் காவல்துறையும் இயங்கின.இது வரை இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை மாறாக தங்களின் திட்டப்படி அரசபதவிகளிள் அமர்ந்துள்ளார்கள்.

இவையனைத்தும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. காரணம் சரிந்து வந்த தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்திடவும் தேர்தலில் வென்று ஆட்சியில் அமரவும் தான். அதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ரயில் எரிக்கப்பட்டு அப்பழி அப்பாவி முஸ்லிம்கள் மீது இடப்பட்டு அவர்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாத தீவிரவாத கும்பல்களால் அரசின் ஆசிர்வாதத்தோடு படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு முந்தைய சம்பவங்களும் உதாரணங்களாக உள்ளன. தாங்கள் செல்வாக்கு குறையும் போதெல்லாம் ரதயாத்திரை நடத்தி ரத்த ஆறு ஓட்டுவது, அப்பாவிகளையும் தலைவர்களையும் கொன்று அப்பழியை சிறுபான்மையினர் மீது இட்டு தேச பக்தி என்ற பெயரில் வெறியாட்டம் ஆடுவது என்று.

ஆக இப்போது மும்பையில் நடந்த சம்பவமும் கூட கோத்ரா சம்பவம் மற்றும் தேசப்பிதா மகாத்மா படுகொலையைப் போன்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக இருக்கலாம். இது மும்பையை மறு குஜராத்தாக மாற்றுவதற்காக முன்னோட்டமாக கூட இருக்கலாம். இதற்கு கடந்த சில நாட்களாக ஃபாசிச தீவிரவாதக்குழுவான சிவசேனாவினர் மும்பையில் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதல் சம்பவங்களே உதாரணம்.


தற்போது இது போன்ற ஒரு திட்டமிட்ட அதிக உயிர் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு சிவசேனா, வி.எச்.பி. பஜ்ரங்கள் தவிர்த்து எந்த ஒரு குழுவும் மும்பையில் இயங்கி வருவதாக தெறியவில்லை. 1993 க்கு பிறகு தாவுத் இபுறாஹிம் போன்றோரின் அண்டர்கிரவுன்ட் அரசாங்கங்கள் ஒழிக்கப்பட்டு இப்போது அது போன்ற அண்டாகிரவுன்ட் அரசாங்கங்களை ஃபாசிச தீவிரவாதி சிவசேனா தலைவன் பால்தாக்கரேயின் குழுக்களே நடத்தி வருகின்றன. இவர்களுக்கு பலமான அரசியல் பொருளாதார பலமும் உண்டு. சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக வேண்டியும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக வேண்டியும் குஜராத்தில் நடத்தியது போல் இந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணமாக கொண்டு தேச பக்தி என்ற பெயரில் மதக்கலவரங்களை மும்பையெங்கும் ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் மீது இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு கூட இதைச்செய்திருக்கலாம்.

உடனடியாக இந்திய அரசு எந்த வித பாராபட்சமும் இன்றி அரசியல் அழுத்தங்களுக்கு பணியாது நேர்மையான விசாரணை மேற்கொன்டு குற்றவாளிகளை அவர்கள் யாராக இருந்தாலும் நாட்டிற்கு அடையாளப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்படியில்லையெனில் இந்திய நாட்டில் அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

ஒருவேளை இந்த சம்பவத்தில் எதிரி நாட்டவரோ அல்லது அவர்களின் உதவி பெறும் தீவிரவாத குழுக்கலோ ஈடுபட்டிருந்தால் அமெரிக்கா செய்வதுபோல் இந்திய அரசு தனது அனைத்து ராணுவ பலத்தையும் கொண்டு இக்குழுக்களை இயங்கும் இடத்தை கண்டறிந்து அழித்திட வேண்டும். தற்காப்பு நடவடிக்கையாக இதனை மேற்கொன்டு இந்திய பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேன்டிய கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஏனெனில் அன்று 1931 ல் இந்து தீவிரவாத கும்பல்களின் சித்தாந்த தலைவர்களிள் ஒருவனான டாக்டர்.மூஞ்சே என்பவன் ஃபாசிஸ்டுகளின் தலைவனான முசோலினியை ஃபாசிஸ்டுகளின் அன்றைய தலைமை பீடமான போலசோவென்சியா விலேயே சந்தித்து உதவி பெற்றுள்ளான் இதுபோன்று அந்நிய ஃபாசிச அரசுகளின் உதவிகளைக் கொண்டே அன்று நமது தேசப்பிதா மகாத்மா படுகொலை செய்யப்பட்டார். ஆமதாபாத் கலவரம் போன்ற பல கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு தங்களை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக்கொண்டார்கள் இன்றை இந்திய ஃபாசிச தீவிரவாத குழுக்கலான ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி பஜ்ரங்தள் போன்றோர்.

இது அமைதியாக வாழும் மும்பை மக்களிடையே மத துவேஷத்தை தூண்டி மும்பையை மறு குஜராத் ஆக்குவதற்கான 'கோத்ரா சம்பவம்' போன்ற திட்டமிடுதலாக கூட இந்த தாக்குதல் இருக்கலாம். அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் ''லஷ்கர்-இ-தொய்யிபா'' ''ஜெயஸ்-இ-முகம்மத்'' போன்ற போர்வை கொன்டு மூடி மறைத்திடாமல், இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு தன்மீதும் தன் நாட்டின் இறையான்மை மீதும் தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரனை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துனைநின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும். இந்திய அரசால் பொதுவாக எந்த சம்பவம் நடந்தாலும் குற்றம் சாட்டப்படும் அனைத்து அமைப்புக்களும் இந்த படுகொலையை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆக உண்மைக்குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு அடையாளப்படுத்தும் பொறுப்பு அரசை சார்ந்துள்ளது. பாரதப்பிரதமர் மதிப்பிற்குறிய மன்மோகன் சிங் அவர்கள் கூறியது போல் உண்மை குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளப்படுத்துவார் என்று நம்புவோமாக.

உயிர், உடமைகளை, உறவுகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும்., அனுதாபத்தையும் தெறிவித்து இந்திய நாட்டின் இறையான்மை காக்கவும் எம்மக்கள் என்றும் ஒற்றுமையாக வாழவும் வேன்டி கண்ணீருடன் இறைவனை பிரார்த்தித்தவனாக விடைபெறுகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்
இந்தியப்பிரஜை

உறுப்பினர்கள்

விமர்சனங்கள்

அலமாரி